வவுனியா தெற்கு கல்வி வலயத்திற்குட்பட்ட நகர கோட்டத்திற்குட்பட்ட 42 பாடசாலைகளை நாளை மூடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
வவுனியா மாவட்ட செயலகத்தில் இன்று இடம்பெற்ற அவசர கூட்டத்திலேயே இந்த முடிவு எட்டப்பட்டுள்ளது.
வவுனியா நகரை சேர்ந்த 2,000 பேரினது பி.சி.ஆர் முடிவுகள் வரும்வரைக்கும், வவுனியா நகரை அண்மித்த நெளுக்குளம், தாண்டிக்குளம், பூந்தோட்டம், மூன்றுமுறிப்பு, மடுக்கந்தை ஆகிய பகுதிகளில் சோதனை நிலையங்களை அமைத்தும் அதற்குட்பட்ட பகுதிகளுக்குள் முடக்க நிலைமையை ஏற்படுத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் அதனை கருத்தில் கொண்டு, வவுனியா நகர கோட்டத்திற்குட்பட்ட 42 பாடசாலைகளை நாளையதினம்(13.01.2021) மூட தீர்மானித்துள்ளதுடன், செட்டிகுளம் கோட்டம் மற்றும் வவுனியா வடக்கு கல்வி வலயத்திற்குட்பட்ட இரண்டு கோட்ட பாடசாலைகளினதும் கல்வி செயற்பாடுகளை வருகைதரும் ஆசிரியர்களை கொண்டு நடாத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், இயங்கும் பாடசாலைகளுக்கு, முடக்கப்பட்ட பகுதியில் இருந்து செல்லும் ஆசிரியர்கள் கடமைக்குச் செல்ல தேவையில்லை எனவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM