வவுனியா பட்டாணிசூர் பகுதியில் 7 பேருக்கு கொரோனா தொற்று உள்ளமை கடந்த வாரம் உறுதிசெய்யப்பட்ட நிலையில் பட்டாணிச்சூர் கிராமம் கடந்த ஒருவாரமாக முடக்கப்பட்டுள்ளதுடன் குறித்த நபர்களுடன் தொடர்புகளை பேணிய பலருக்கு பி.சி.ஆர் பரிசோதனை முன்னெடுக்கப்பட்டிருந்தது.
இதேவேளை வவுனியா நகரப்பகுதிகளை சேர்ந்த வியாபார நிலையங்களில் பணியாற்றும் ஊழியர்களிற்கு நேற்றுமுன்தினம் முன்னெடுக்கப்பட்ட பி.சி.ஆர். பரிசோதனைகளில் 106 பேருக்கு தொற்று உறுதிப்படுத்தப்படாத நிலையில் 36 பேரது மாதிரிகள் மீளவும் பரிசோதனைக்கு அனுப்பப்பட்டிருந்தது.
அவர்களது முடிவுகள் இன்று கிடைக்கப்பெற்றது. அதனடிப்படையில் 25 பேருக்கு தொற்றுறுதி செய்யப்பட்டுள்ளதுடன், வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட மேலும் இருவருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
அந்தவகையில் கடந்த ஒருவாரத்தில் மாத்திரம் வவுனியாவின் கொரோனா தொற்றாளர்கள் எண்ணிக்கை 99 ஆக அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM