இலங்கையில் தொடர்ந்தும் அதிகரிக்கும் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை

Published By: Digital Desk 4

11 Jan, 2021 | 09:10 PM
image

(எம்.மனோசித்ரா)

நாட்டில் கொவிட் தொற்றுக்கு உள்ளானோர் எண்ணிக்கை தொடர்ந்தும் அதிகரித்து வருகிறது. எனினும் தொற்றாளர்களை விட தொற்றுக்கு உள்ளாகி குணமடைந்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. அதற்கமைய இன்று திங்கட்கிழமை 487 பேர் குணமடைந்துள்ளனர். 

இதேவேளை இன்று மாலை 9 மணி வரை 568 புதிய தொற்றாளர்கள் இனங்காணப்பட்டனர்.

இனங்காணப்பட்ட தொற்றாளர்கள் பேலியகொட கொவிட் கொத்தணியுடன் தொடர்புடையவர்களாவர். மினுவாங்கொடை மற்றும் பேலியகொட கொரோனா கொத்தணியுடன் தொடர்புபட்டவர்களின் எண்ணிக்கை 44 903 ஆக அதிகரித்துள்ளது.

அத்தோடு இலங்கையில் இதுவரை அடையாளம் காணப்பட்ட மொத்த கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 48,948 ஆகும்.

நோய்த் தொற்றுக்கு உள்ளான 6342 பேர் தொடர்ந்தும் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். நோய்த் தொற்றுக்கு உள்ளாகி குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 42 091 ஆகும். இதுவரை நாட்டில் 232 கொரோனா மரணங்கள் பதிவாகியுள்ளன.

ஞாயிறன்று பதிவான மரணங்கள்

நீர்கொழும்பு சிறைச்சாலை கைதியான 62 வயதான ஆண் ஒருவர் நீர்கொழும்பு பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் முல்லேரியா ஆதார வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டதுடன் அந்த வைத்தியசாலையில் கடந்த 08 ஆம் திகதி மரணமானார். மரணத்திற்கான காரணம் கொவிட் நிமோனியா நிலை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொழும்பு 14 பிரதேசத்தைச் சேர்ந்த 80 வயதான பெண் ஒருவர் மஹரகம  வைத்தியசாலையில் கொவிட் தொற்றுக்குள்ளானவர் என இனங்காணப்பட்ட பின்னர் பிம்புர ஆதார வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டதுடன் அந்த வைத்தியசாலையில் நேற்று 10 ஆம் திகதி மரணமானார். மரணத்திற்கான காரணம் புற்றுநோய் நிலை மற்றும் கொவிட் நிமோனியா நோய் நிலை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இரத்தினபுரி பிரதேசத்தைச் சேர்ந்த 64 வயதான ஆண் ஒருவர் இரத்தினபுரி போதனா வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்று வந்த வேளையில் கடந்த 09 ஆம் திகதி மரணமானார். மரணத்திற்கான காரணம் கொவி; நிமோனியா மற்றும் இருதய நோய் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

சுதந்திரக் கட்சியின் உத்தியோகபூர்வமற்ற தலைவராக ரணில்...

2024-04-18 16:53:55
news-image

களுத்துறையில் சுற்றுலா பயணிக்கு வடை மற்றும்...

2024-04-18 21:19:33
news-image

மக்களின் கோரிக்கைக்கு அமைய முறைமை மாற்றத்தை...

2024-04-18 20:45:44
news-image

மே மாத இறுதிக்குள் வடக்கில் 60...

2024-04-18 17:27:02
news-image

யாழில் நள்ளிரவில் சுண்ணகற்கள் அகழ்ந்து எடுக்கப்பட்டு...

2024-04-18 17:21:57
news-image

உண்ணாவிரதமிருந்து உயிர்நீர்த்த தியாகதீபம் அன்னை பூபதியின்...

2024-04-18 18:54:05
news-image

இராணுவ வீரர்களின் பொதுமன்னிப்பு காலம் தொடர்பில்...

2024-04-18 19:50:26
news-image

பாடசாலை சூழலில் கனரக வாகனங்கள் போக்குவரத்தில்...

2024-04-18 17:13:51
news-image

யாழில் குழாய்க்கிணறுகளை தோன்றுவதால் ஏற்படும் ஆபத்துக்கள்...

2024-04-18 17:29:02
news-image

கூரிய ஆயுதங்களால் தாக்கப்பட்டு கோழி இறைச்சி...

2024-04-18 17:43:51
news-image

மாளிகாகந்த நீதிமன்றத்துக்கு அழைத்துச் செல்லப்பட்ட சந்தேக...

2024-04-18 17:24:50
news-image

திருகோணமலை வைத்தியசாலையில் நோயாளர் காவு வண்டிகள்...

2024-04-18 17:13:38