வவுனியா மாவட்டத்தில் இன்றைய தினம் பெய்த கடும் மழை காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளதுடன், வீடுகளிற்குள் வெள்ள நீர் தேங்கியுள்ளமையால் 14 குடும்பங்களைச் சேர்ந்த 50 பேர் பொது மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
குறிப்பாக வவனியா நகர்ப்பகுதியில் இன்று காலை 8.30 மணியிலிருந்து 11.30 மணி வரையான மூன்று மணி நேர காலப்பகுதியில் 54 மில்லிமீற்றர் மழை வீழ்ச்சி பதிவாகியுள்ளதாக வானிலை அவதானம் நிலையம் தெரிவித்துள்ளது.
இந்தநிலையில், வவுனியா நகர்ப்பகுதிகளில் வீதிகள் எங்கும் வெள்ளநீர் தேங்கியுள்ளதுடன் பூந்தோட்டம் மற்றும் சிறிநகர், கருப்பணிச்சாங்குளம் பகுதிகளில் வெள்ளநீர் வீடுகளிற்குள் உட்புகுந்துள்ளது.
இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பை சந்தித்துள்ளது. வயல் நிலங்களிலும் வெள்ளநீர் தேங்கியுள்ளமையால் நெற்பயிர்ச்செய்கையும் அழிவை சந்தித்துள்ளது.
இதேவேளை, இன்றுகாலை 8.30 மணிவரையான கடந்த 24 மணிநேரத்தில் அதிகபட்சமாக ஓமந்தையில் 85 மில்லிமீற்றர் மழைவீழ்ச்சியும், வவுனியாவில் 31.5 மில்லிமீற்றர் மழைவீழ்ச்சியும், செட்டிகுளத்தில் 28 மில்லிமீற்றர், நெடுங்கேணி 37 மில்லிமீற்றர், மழைவீழ்ச்சியும், உலுக்குளத்தில் 50.6 மில்லிமீற்றர் மழைவீழ்ச்சியும் பதிவாகியள்ளதாக வானிலை அவதான நிலையம் தெரிவித்துள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM