சிறைச்சாலைக்குள் வீசப்பட்ட தடைசெய்யப்பட்ட பொருட்கள் அடங்கிய பொதி

Published By: Digital Desk 4

11 Jan, 2021 | 06:28 AM
image

(செ.தேன்மொழி)

களுத்துறை சிறைச்சாலையின் மதிலுக்கு மேல் தடைச்செய்யப்பட்டுள்ள பொருட்கள் அடங்கிய பொதியொன்று எறியப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

களுத்துறை சிறைச்சாலையின் மதிலுக்கு மேல் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 1.30 மணியளவில் இவ்வாறு தடைசெய்யப் பட்ட பொருட்கள் அடங்கிய பொதியொன்று எறியப்பட்டுள்ளது.

இதன்போது குறித்த பொதியிலிருந்து 4 தொலைபேசிகள் , 7 சிம் அட்டைகள், 10 கிராம் கேரளா கஞ்சா , ஐஸ் போதைப் பொருள் அடங்கிய இரு பக்கற்றுகள்  மற்றும் 12 புகையிலைகளும் கைப்பற்றப்பட்டுள்ளன.

சிறைச்சாலையின் அதிகாரிகளின் கண்காணிப்பு நடவடிக்கைகளின் போதே பொதி கைப்பற்றப்பட்டுள்ளதுடன் , சிறைக்கைதிகளுக்கு வழங்கும் நோக்கத்திலே இவ்வாறு யாராவது எறிந்திருக்கலாம் என்று பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை...

2024-03-29 11:11:34
news-image

பிளவை நோக்கி பொதுஜனபெரமுன- டெய்லிமிரர்

2024-03-29 09:59:01
news-image

எந்த தேர்தலில் முதலில் நடைபெறவேண்டும் என்பதை...

2024-03-29 09:42:41
news-image

இன்று பெரிய வெள்ளி

2024-03-29 09:47:02
news-image

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பில் கசிப்பு உற்பத்தி நிலையம்...

2024-03-29 09:20:02
news-image

பொது சுகாதார பரிசோதகர் மீது துப்பாக்கிச்...

2024-03-29 09:27:51
news-image

இன்றைய வானிலை

2024-03-29 06:43:30
news-image

தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000...

2024-03-29 01:56:33
news-image

இணையவழி சிறுவர் துஷ்பிரயோகங்களை அறிக்கையிடும் புதிய...

2024-03-29 01:47:30
news-image

பழுதடைந்த உருளைக்கிழங்கு விவகாரம் : மாகாண...

2024-03-29 01:39:20
news-image

இரண்டு மாதங்களில் 983.7 மில்லியன் ரூபா...

2024-03-29 01:36:37
news-image

இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் கிளிநொச்சி...

2024-03-29 01:27:15