கைதுசெய்யப்பட்ட ஈ.ரி.ஐ. நிறுவன பணிப்பாளர்கள் தனிமைப்படுத்தலில்

Published By: Digital Desk 4

11 Jan, 2021 | 06:26 AM
image

(செ.தேன்மொழி)

நிதி முறைகேடு தொடர்பில் கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள ஈ.ரி.ஐ நிறுவனத்தின் முன்னாள் பணிப்பாளர்கள் நால்வரும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் ஊடகப்பேச்சாளர் சந்தன ஏக்கநாயக்க தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறியுள்ளதாவது,

ஈ.ரி.ஐ நிறுவனத்தின் முன்னாள் பணிப்பாளர்களான ஜீவக எதிரிசிங்க, நாலக எதிரிசிங்க , அசங்க எதிரிசிங்க மற்றும் அஞ்சலி தீபா எதிரிசிங்க ஆகியோர் 6.4 மில்லியன் ரூபாய் பணத்தை மோசடி செய்ததாக கடந்த வெள்ளிக்கிழமை குற்றப்புலனாய்வு பிரிவினரால் கைது செய்து செய்யப்பட்டிருந்தனர்.

சந்தேக நபர்கள் நால்வரும் , கொழும்பு மேலதிக நீதிவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டதுடன் , சந்தேக நபர்களுக்கு பிணைவழங்கினால் , அவர்களுடான சாட்சியங்களுக்கு அச்சுறுத்தல்கள் ஏற்படவாய்ப்புள்ளதாக மன்றில் சுட்டிக்காட்டப்பட்டதை அடுத்தே நீதிவான் அவர்களை ,  நாளைமறுதினம் செவ்வாய்கிழமை வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டிருந்தார். அதற்கமையவே சந்தேக நபர்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்டனர்.

இந்நிலையில் கொவிட்-19 வைரஸ் பரவல் காரணமாக முன்னாள் பணிப்பாளர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். அதற்கமைய முன்னாள் பணிப்பாளர்களான ஜீவக எதிரிசிங்க, நாலக எதிரிசிங்க , அசங்க எதிரிசிங்க ஆகியோர் கொழும்பு – வெலிக்கடை சிறைச்சாலையில் ஸ்தாபிக்கப்பட்டுள்ள தனிமைப்படுத்தல் நிலையத்திலும் , அஞ்சலி தீபா எதிரிசிங்க களுத்துறை சிறைச்சாலையில் பெண் கைதிகளுக்காக ஸ்தாபிக்கப்பட்டுள்ள தனிமைப்படுத்தல் நிலையத்திலும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இலங்கை கிரிக்கெட்டை உலகில் தலைசிறந்ததாக மீண்டும்...

2024-03-29 20:09:53
news-image

தண்டனைச்சட்டக்கோவையின் 363, 364 ஆம் பிரிவுகளைத்...

2024-03-29 19:35:09
news-image

பொதுத் தேர்தல் இடம்பெற்றால் எந்த கட்சிக்கும்...

2024-03-29 18:29:33
news-image

ஞானசார தேரர் திடீரென சிறைச்சாலை வைத்தியசாலையில்...

2024-03-29 18:07:00
news-image

மார்ச்சில் பணவீக்கம் 0.9 சதவீதமாக சடுதியாக...

2024-03-29 18:01:49
news-image

யாழ். போதனா வைத்தியசாலைக்கான எரியூட்டியை அமைச்சர்...

2024-03-29 17:55:07
news-image

பொதுஜன பெரமுனவின் மாவட்ட மகா சம்மேளனம்...

2024-03-29 17:15:52
news-image

இனப்பிரச்சினைக்கு 13 வது திருத்தத்தின் அடிப்படையில்...

2024-03-29 16:52:41
news-image

சிவனொளிபாத மலையிலிருந்து பள்ளத்தில் விழுந்த சுற்றுலா...

2024-03-29 17:02:49
news-image

சந்தேகத்துக்கிடமான செயற்பாடுகள் காணப்பட்டால் உடனடியாக பொலிஸாருக்கு...

2024-03-29 18:20:48
news-image

அநுராதபுரம் திறந்தவெளி சிறைச்சாலையில் இரு கைதிகள்...

2024-03-29 15:55:47
news-image

அதிகார பகிர்வினால் மாத்திரமே பொருளாதார வளர்ச்சி...

2024-03-29 15:40:08