(செ.தேன்மொழி)
நிதி முறைகேடு தொடர்பில் கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள ஈ.ரி.ஐ நிறுவனத்தின் முன்னாள் பணிப்பாளர்கள் நால்வரும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் ஊடகப்பேச்சாளர் சந்தன ஏக்கநாயக்க தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறியுள்ளதாவது,
ஈ.ரி.ஐ நிறுவனத்தின் முன்னாள் பணிப்பாளர்களான ஜீவக எதிரிசிங்க, நாலக எதிரிசிங்க , அசங்க எதிரிசிங்க மற்றும் அஞ்சலி தீபா எதிரிசிங்க ஆகியோர் 6.4 மில்லியன் ரூபாய் பணத்தை மோசடி செய்ததாக கடந்த வெள்ளிக்கிழமை குற்றப்புலனாய்வு பிரிவினரால் கைது செய்து செய்யப்பட்டிருந்தனர்.
சந்தேக நபர்கள் நால்வரும் , கொழும்பு மேலதிக நீதிவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டதுடன் , சந்தேக நபர்களுக்கு பிணைவழங்கினால் , அவர்களுடான சாட்சியங்களுக்கு அச்சுறுத்தல்கள் ஏற்படவாய்ப்புள்ளதாக மன்றில் சுட்டிக்காட்டப்பட்டதை அடுத்தே நீதிவான் அவர்களை , நாளைமறுதினம் செவ்வாய்கிழமை வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டிருந்தார். அதற்கமையவே சந்தேக நபர்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்டனர்.
இந்நிலையில் கொவிட்-19 வைரஸ் பரவல் காரணமாக முன்னாள் பணிப்பாளர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். அதற்கமைய முன்னாள் பணிப்பாளர்களான ஜீவக எதிரிசிங்க, நாலக எதிரிசிங்க , அசங்க எதிரிசிங்க ஆகியோர் கொழும்பு – வெலிக்கடை சிறைச்சாலையில் ஸ்தாபிக்கப்பட்டுள்ள தனிமைப்படுத்தல் நிலையத்திலும் , அஞ்சலி தீபா எதிரிசிங்க களுத்துறை சிறைச்சாலையில் பெண் கைதிகளுக்காக ஸ்தாபிக்கப்பட்டுள்ள தனிமைப்படுத்தல் நிலையத்திலும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM