"அரசாங்கமே..! கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்று": நுவரெலியாவில் போராட்டம்

Published By: J.G.Stephan

10 Jan, 2021 | 04:20 PM
image

தோட்டத் தொழிலாளர்களின் 1000 ரூபா சம்பளவுயர்விற்கு அரசாங்கமே பொறுப்புக் கூற வேண்டும். கையொப்பமிடும் தொழிற்சங்கங்கள் எந்த காரணம் கொண்டும் 1000 ரூபாவை விட்டுக் கொடுக்ககூடாது என நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் மலையக மக்கள் முன்னணியின் தலைவருமான வேலுசாமி இராதாகிருஸ்ணன் தெரிவித்துள்ளார்.

மலையக மக்கள் முன்னணியும், மலையக தொழிலாளர் முன்னணியும் இணைந்து ஏற்பாடு செய்த தோட்ட தொழிலாளர்களின் 1000 ரூபா கவனயீர்ப்பு போராட்டம் நுவரெலியா தபாற்கந்தோருக்கு முன்னால் (10.01.2021) இன்று நடைபெற்றது.

இந்த கவனயீர்ப்பு போராட்டத்திற்கு நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் மலையக மக்கள் முன்னணியின் தலைவருமான வேலுசாமி இராதாகிருஸ்ணன் தலைமை தாங்கியதுடன், இந்த போராட்டத்தில் மலையக மக்கள் முன்னணியின் செயலாளர் நாயகம் பேராசிரியர் சங்கரன் விஜயசந்திரன், முன்னாள் மத்திய மாகாண சபை உறுப்பினரும் மலையக மக்கள் முன்னணியின் தேசிய அமைப்பாளருமான ஆர்.ராஜாராம், மலையக தொழிலாளர் முன்னணியின் செயலாளர் கே.சுப்பிரமணியம், நிதிச் செயலாளர் விஸ்வநாதன் புஸ்பா, பிரதி தலைவர் ஏ.லோரன்ஸ், பிரதேச சபை உறுப்பினர்களான டி.ஜனார்தனன், ஹரிச்சந்திரன் பசறை பிரதேச சபை உறுப்பினர் கண்மனி சிவநேசன் உட்பட பொதுமக்களும் கலந்து கொண்டனர்.

இங்கு தொடர்ந்து உரையாற்றிய வேலுசாமி இராதாகிருஸ்ணன், அரசாங்கம் ஏனைய தொழிற்சங்கங்கள், அரசாங்க அதிகாரிகள், அனைவருக்கும் சம்பள அதிகரிப்பை வழங்குவதற்கு நடவடிக்கை எடுத்துள்ளது. ஆனால் பாராளுமன்றத்தில் பிரதமரால்  முன்மொழியப்பட்ட தோட்ட தொழிலாளர்களின் 1000 ரூபா அடிப்படை சம்பளத்தை மாத்திரம் தோட்ட கம்பனிகள் வழங்க மறுப்பது எந்த வகையில் நியாயமானது?

தோட்ட கம்பனிகள் அவர்களுடைய மேல்மட்டம் முதல் கீழ் மட்டம் வரை அனைவருக்கும் சம்பள அதிகரிப்பையும் ஏனைய கொடுப்பனவுகளையும் தங்கு தடையின்றி வழங்குகின்றது.



ஆனால் தோட்ட தொழிலாளர்களின் அடிப்படை சம்பளத்தை வழங்க மறுத்து வருகின்றது. இது ஒரு திட்டமிடப்பட்ட சதியாகவே நாங்கள் பார்க்கின்றோம்.

தோட்ட தொழிலாளர்கள்  ஒவ்வொரு இரண்டு வருடத்திற்கு ஒரு முறையும் போராட்டம் செய்தே சம்பள உயர்வை பெற்றுக்கொள்ள வேண்டிய ஒரு துர்பாக்கிய நிலைமையே காணப்படுகின்றது. ஆனால் தோட்டத் தொழிலாளர்கள் அவர்களுடைய கடமையை சரியாக செய்வதன் காரணமாகவே இன்று அரசாங்கத்திற்கு அந்நிய செலவாணியை பெற்றுக் கொள்ளக்கூடிய ஒரு நிலைமை இருக்கின்றது. ஆனால் அவர்களுடைய எந்த ஒரு கோரிக்கையையும் தோட்ட கம்பனிகள் கவனத்தில் கொள்வதில்லை.

இந்த முறை தோட்ட தொழிலாளர்களின்  அடிப்படை சம்பளம் 1000 வழங்க முடியாவிட்டால் அவர்கள் அரசாங்கத்திற்கு தோட்டங்களை ஒப்படைக்க வேண்டும். கூட்டு ஒப்பந்தத்தில் கைச்சாத்திடுகின்ற தொழிற்சங்கங்கள் எந்த காரணம் கொண்டும் 1000 ரூபா அடிப்படைய சம்பளம் என்ற விடயத்தில் இருந்து பின்வாங்க கூடாது. நாங்களும் அவர்களுக்கு முழுமையான ஒத்துழைப்பை வழங்க தயாராக இருக்கின்றோம் என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

அநுராதபுரம் திறந்தவெளி சிறைச்சாலையில் இரு கைதிகள்...

2024-03-29 15:55:47
news-image

அதிகார பகிர்வினால் மாத்திரமே பொருளாதார வளர்ச்சி...

2024-03-29 15:40:08
news-image

அம்பாந்தோட்டையில் புதிய சுத்திகரிப்பு நிலையம் சினொபெக்...

2024-03-29 15:29:13
news-image

நுவரெலியாவில் ஆடை தொழிற்சாலை ஊழியர்களின் போராட்டம்...

2024-03-29 14:40:51
news-image

பெரிய வெள்ளியான இன்று மட்டக்களப்பில் திருச்சிலுவைப்...

2024-03-29 14:32:43
news-image

‘யுக்திய’ நடவடிக்கை : இதுவரை பாதாள...

2024-03-29 14:23:33
news-image

பாணந்துறை அடுக்குமாடி குடியிருப்பில் யுக்திய நடவடிக்கை...

2024-03-29 14:28:04
news-image

500 ரூபாய் இலஞ்சம் பெற்ற பொலிஸ்...

2024-03-29 13:14:04
news-image

ஈஸ்டர் தினத்தை முன்னிட்டு 6,837 பொலிஸார்...

2024-03-29 13:52:53
news-image

அமைப்பு முறை மாற்றம் ஏற்பட்டால் மாத்திரமே...

2024-03-29 12:22:11
news-image

கரையோர மார்க்கத்தில் ரயில் சேவைகள் தாமதம்

2024-03-29 12:04:59
news-image

இலங்கையில் எச்.ஐ.வி தொற்று அதிகரிப்பு!

2024-03-29 12:58:38