நினைவாலயங்களை அழிப்பதும், நினைவு தினங்களைத் தடுப்பதும் நாட்டில் பிரச்சனைகளை வலுப்படுத்தும் - ப.சத்தியலிங்கம்

Published By: Digital Desk 3

09 Jan, 2021 | 07:04 PM
image

யுத்தத்தில் மரணித்தவர்களது நினைவாலயங்களை அழிப்பதும் நினைவுதினங்களை பல்வேறு காரணங்களை கூறி தடுத்து நிறுத்துவதும் இந்தநாட்டில் உள்ள பிரச்சனைகளை தீர்ப்பதற்கு ஒருபோதும் உதவப்போவதில்லை. மாறாக பிரச்சனைகளை உக்கிரப்படுத்துவதாகவே அமையும் என இலங்கைத் தமிழரசுக்கட்சியின் பதில் பொதுச்செயலாளர் பத்மநாதன் சத்தியலிங்கம் தெரிவித்துள்ளார்.

யாழ்.பல்கலைக்கழக வளாகத்தில் அமைக்கப்பட்டிருந்த முள்ளிவாய்க்கால் நினைவுத் தூபி உடைக்கப்பட்டமை தொடர்பில் கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில்,

கோரமான யுத்தத்தின் அடையாளங்களை அழிப்பதால் பிரச்சனைகள் தீர்ந்துவிடாது.

இந்தநாட்டில் அரசியல், பொருளாதார, சமூக உரிமைக்காக எண்ணிக்கையில் சிறுபாண்மையின மக்கள் முன்னெடுத்த 70 ஆண்டுகால உரிமை போராட்டத்தில் ஏற்படுத்தப்பட்ட அடையாளங்களை அழிப்பதனூடாக மக்கள் மனங்களில் இருந்து அவற்றை அழிக்கமுடியாது என்பதை சம்மந்தப்பட்டவர்கள் புரிந்துகொள்ளவேண்டும்.

யுத்தத்தில் மரணித்தவர்களது நினைவாலயங்களை அழிப்பதும் நினைவுதினங்களை பல்வேறு காரணங்களை கூறி தடுத்து நிறுத்துவதும் இந்தநாட்டில் உள்ள பிரச்சனைகளை தீர்ப்பதற்கு ஒருபோதும் உதவப்போவதில்லை. மாறாக பிரச்சனைகளை உக்கிரப்படுத்துவதாகவே அமையும்.

இந்தநாட்டில் நிலையான சமாதானமும் அபிவிருத்தியும் ஏற்படுவதை அரசாங்கம் விரும்புமேயானால் இவ்வாறான நடவடிக்கைகளை இனிமேலாவது செய்யாது பொறுப்புடன் நடந்துகொள்ள வேண்டும்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பொதுத் தேர்தல் இடம்பெற்றால் எந்த கட்சிக்கும்...

2024-03-29 18:29:33
news-image

ஞானசார தேரர் திடீரென சிறைச்சாலை வைத்தியசாலையில்...

2024-03-29 18:07:00
news-image

மார்ச்சில் பணவீக்கம் 0.9 சதவீதமாக சடுதியாக...

2024-03-29 18:01:49
news-image

யாழ். போதனா வைத்தியசாலைக்கான எரியூட்டியை அமைச்சர்...

2024-03-29 17:55:07
news-image

பொதுஜன பெரமுனவின் மாவட்ட மகா சம்மேளனம்...

2024-03-29 17:15:52
news-image

இனப்பிரச்சினைக்கு 13 வது திருத்தத்தின் அடிப்படையில்...

2024-03-29 16:52:41
news-image

சிவனொளிபாத மலையிலிருந்து பள்ளத்தில் விழுந்த சுற்றுலா...

2024-03-29 17:02:49
news-image

சந்தேகத்துக்கிடமான செயற்பாடுகள் காணப்பட்டால் உடனடியாக பொலிஸாருக்கு...

2024-03-29 18:20:48
news-image

அநுராதபுரம் திறந்தவெளி சிறைச்சாலையில் இரு கைதிகள்...

2024-03-29 15:55:47
news-image

அதிகார பகிர்வினால் மாத்திரமே பொருளாதார வளர்ச்சி...

2024-03-29 15:40:08
news-image

அம்பாந்தோட்டையில் புதிய சுத்திகரிப்பு நிலையம் சினொபெக்...

2024-03-29 15:29:13
news-image

நுவரெலியாவில் ஆடை தொழிற்சாலை ஊழியர்களின் போராட்டம்...

2024-03-29 14:40:51