சிறுமியை துஷ்பிரயோகம் செய்த இளைஞன், இளைஞனின் தாய் உட்பட நால்வர் கைது

Published By: Digital Desk 4

09 Jan, 2021 | 07:16 AM
image

(செ.தேன்மொழி)

காலி –போத்தலை பகுதியில் சிறுமியொருவரை துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தியமை தொடர்பில் இளைஞன்  ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், அவருக்கு உதவி ஒத்தாசைகளை வழங்கியதாக அவரது தாயார் மற்றும் அயல் வீட்டு பெண்ணொருவர் உட்பட நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

போத்தலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் இன்று பொலிஸாருக்கு கிடைக்கப் பெற்ற தகவலுக்கமைய மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போதே சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

கோனபுர பகுதியைச் சேர்ந்த 22 வயதுடைய இளைஞர் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். 

இவருக்கு உதவி ஒத்தாசைகளை வழங்கியதாக அவரது தாயார், அவரது உறவினர் ஒருவரும் அயல் வீட்டு பெண்ணொருவர் மற்றும் முச்சக்கர வண்டி சாரதியொருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

காசியதெனிய பகுதியைச் சேர்ந்த 15 வயதுடைய சிறுமியொருவரே இவ்வாறு துஷ்பிரயோகத்திற்குட்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸாரின் விசாரணைகளின் போது தெரியவந்துள்ளது.

கடந்த இரு மாதங்களுக்கு முன்னர் ,சந்தேக நபரான இளைஞர் பாடசாலை மாணவியான குறித்த சிறுமியை அழைத்துச் சென்றுள்ளதுடன் , பாணந்துறை பகுதியில் வாடகைக்கு ஒரு வீட்டைப் பெற்றுக் கொண்டு அங்கு இருவரும் வசித்து வந்துள்ளனர்.

இந்நிலையில் இது தொடர்பில் பொலிஸாருக்கு முறைப்பாடு கிடைக்கப்பெற்றதை அடுத்தே பொலிஸார் அவர்களை கைது செய்துள்ளனர்.

சந்தேக நபர்கள் சனிக்கிழமை நீதிவான் நீதிமன்றத்தின் முன்னிலையில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர். இதற்காக உதவி ஒத்தாசைகளை வழங்கியதாக கூறப்படும் இராணுவ சிப்பாய் ஒருவரை கைது செய்வதற்காக பொலிஸார் தேடுதல் நடவடிக்கைகளை ஆரம்பித்துள்ளனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கோட்டா என்னை ஏமாற்றினார் - மல்கம்...

2024-04-18 16:51:03
news-image

திரியாய் தமிழ் மகாவித்தியாலயத்தின் குடிநீர்ப் பிரச்சினைக்கு...

2024-04-18 16:51:36
news-image

கட்டுத்துப்பாக்கி வெடித்ததில் குடும்பஸ்தர் காயம் -...

2024-04-18 16:18:49
news-image

"வசத் சிரிய - 2024" புத்தாண்டு...

2024-04-18 16:25:36
news-image

அட்டன் – கொழும்பு மார்க்கத்தில் மாத்திரமே...

2024-04-18 16:20:52
news-image

கண்டி நகரில் தீவிரமடையும் குப்பை பிரச்சினை!

2024-04-18 16:31:50
news-image

காத்தான்குடி பாலமுனை கடற்கரையில் பெண் ஒருவரின்...

2024-04-18 15:52:14
news-image

பிட்டிகல பகுதியில் துப்பாக்கிச் சூடு ;...

2024-04-18 15:42:00
news-image

'டைம்' சஞ்சிகையின் ஆளுமை மிக்க 100...

2024-04-18 15:23:39
news-image

இலங்கையில் அதிகளவில் மரணங்கள் ஏற்பட்டமைக்கு காரணம்...

2024-04-18 15:43:57
news-image

பட்டிருப்பு வலயக் கல்விப் பணிப்பாளரின் இடமாற்றத்தை...

2024-04-18 15:29:41
news-image

கடத்தப்பட்டு மியன்மாரில் தடுத்து வைக்கப்பட்டிருந்த மேலும்...

2024-04-18 16:57:33