கடலில் நீராடச் சென்ற இளைஞர் மாயம் ; மட்டக்களப்பில் சம்பவம் 

Published By: Digital Desk 4

08 Jan, 2021 | 05:09 PM
image

மட்டக்களப்பு களுவாஞ்சிகுடி பொலிஸ் பிரிவிலுள்ள களுதாவளைக் கடலில் நேற்று வியாழக்கிழமை (07) நீராடச் சென்ற இளைஞர் ஒருவர் கணாமல் போயுள்ளதாக  களுவாஞ்சிக்குடி பொலிசார் தெரிவித்தனர்.

களுதாவளை மத்தி பிரிவைச் சேர்ந்த 16 வயதுடைய கணேசன் பிதுர்னன் என்பவர்  சம்பவதினமான நேற்று வியாழக்கிழமை மதியம்  உணவருந்திவிட்டு தமது வீட்டிலிருந்து நண்பர் ஒருவரின் வீட்டுக்குச் செல்வதாகப் பெற்றோரிடம் கூறிவிட்டுச் சென்றவர்.

இரவாகியும் வீடு தீரும்பாத நிலையில் உறவினர்கள் அவரை தேடியும் அவரைக் காணவில்லை.

இதனையடுத்து இன்று வெள்ளிக்கிழமை(08) களுவாஞ்சிகுடி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டதையடுத்து இது தொடர்பான விசாரணைகளை பொலிசார் மேற்கொண்டுட நிலையில் குறித்த இளைஞனுடன் பல இளைஞர்கள் ஒன்றினைந்து களுதாவளைக் கடலில் வியாழக்கிழமை மாலையில் நீராடியுள்ளதாகவும் இதன்போது நண்பன் ஒருவர் கடலில் காணாமல் போயுள்ளதாக பொலிசாரின் ஆரம்ப கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

இருந்தபோதும் இது தொடர்பாக பொலிசார் பல திசைகளில் விசாரணைகளை மேற்கொண்டுவருவதாக பொலிசார் தெரிவித்தனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

நுவரெலியாவில் ஆடை தொழிற்சாலை ஊழியர்களின் போராட்டம்...

2024-03-29 14:40:51
news-image

பெரிய வெள்ளியான இன்று மட்டக்களப்பில் திருச்சிலுவைப்...

2024-03-29 14:32:43
news-image

‘யுக்திய’ நடவடிக்கை : இதுவரை பாதாள...

2024-03-29 14:23:33
news-image

பாணந்துறை அடுக்குமாடி குடியிருப்பில் யுக்திய நடவடிக்கை...

2024-03-29 14:28:04
news-image

500 ரூபாய் இலஞ்சம் பெற்ற பொலிஸ்...

2024-03-29 13:14:04
news-image

ஈஸ்டர் தினத்தை முன்னிட்டு 6,837 பொலிஸார்...

2024-03-29 13:52:53
news-image

அமைப்பு முறை மாற்றம் ஏற்பட்டால் மாத்திரமே...

2024-03-29 12:22:11
news-image

கரையோர மார்க்கத்தில் ரயில் சேவைகள் தாமதம்

2024-03-29 12:04:59
news-image

இலங்கையில் எச்.ஐ.வி தொற்று அதிகரிப்பு!

2024-03-29 12:58:38
news-image

மக்களே அவதானமாக இருங்கள் ; சமூக...

2024-03-29 12:09:37
news-image

இரு மாணவர்கள் மின்சாரம் தாக்கி வைத்தியசாலையில்...

2024-03-29 12:02:26
news-image

தேர்தல் திருத்தச் சட்டம் : ஹக்கீம்...

2024-03-29 11:25:08