பாடசாலை மாணவர்களுக்கான சீருடைகளை விநியோகிக்க நடவடிக்கை - ஜீ.எல். பீரிஸ்

Published By: Digital Desk 4

08 Jan, 2021 | 07:26 AM
image

(ஆர்.யசி, எம்.ஆர்.எம்.வசீம்)

பாடசாலை மாணவர்களுக்கான சீருடைகளை சில மாவட்டங்களுக்கு அனுப்பிவைத்திருக்கின்றோம். பாடசாலைகள் ஆரம்பிக்கப்பட்ட பின்னர் மாணவர்களுக்கான சீறுடை அனைத்து பாடசாலைகளுக்கும் அனுப்பிவைக்கப்படும் என கல்வி அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் வியாழக்கிழமை வாய்மூல விடைக்கான கேள்வி நேரத்தின்போது, எதிர்க்கட்சி உறுப்பினர் ரோஹினி குமாரி விஜேரத்ன குறிப்பிடுகையில், 

புதிய வருடத்துக்காக பாடசாலைகள் எதிர்வரும் 11ஆம் திகதி ஆரம்பிக்க இருக்கின்றன. மாணவர்கள் புதிய வருடத்தில் படிப்பதற்கு அச்சுப்புத்தங்கள் வழங்கப்பட்டிருக்கின்றன. என்றாலும் அது பூரணமாக இல்லை. சில வகுப்புகளுக்கு தேவையான அச்சுப்புத்தங்களில் எண்ணிக்கையில் குறைபாடு இருக்கின்றன. 

அதேபோன்று அச்சுப்புத்தகங்களை வழங்கியதுபோல் மாணவர்களுக்கு வழங்கப்படும் சீறுடைகளையும் வழங்கியிருந்தால் மாணவர்கள் பாடசாலை ஆரம்பிக்கும்போது அணிந்துசெல்ல முடியுமாக இருக்கும். அத்துடன் சில மாவட்டங்களுக்கு சீறுடை அனுப்பிவைக்கப்பட்டிருப்பதாக அமைச்சர் தெரிவிக்கின்றார். 

நான் பிரதி நிதித்துவப்படுத்துகின்ற மாத்தளை மாவட்டத்தில் எந்த கல்வி வலயத்துக்கும் சீறுடை வழங்கப்படவில்லை. இதுதொடர்பாக எடுக்கும் நடவடிக்கை என்ன என கேட்டதற்கு பதிலளிக்கையிலேயே அமைச்சர் இவ்வாறு குறிப்பிட்டார்.

அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில்,

புதிய வருடத்துக்காக பாடசாலை மாணவர்களுக்கு தேவையான அச்சுப்புத்தகங்களை விநியோகித்திருக்கின்றோம். மாணவர்களுக்கான சீறுடை விநியோகம் சில மாவட்டங்களுக்கு அனுப்பிவைத்திருக்கின்றோம். 

ஏனைய மாவட்டங்களுக்கு சீறுடைகளை விநியோகிக்க தேவையான நடவடிக்கைகளை மேற்கொண்டுவருகின்றோம். பாடசாலைகள் ஆரம்பிக்கப்பட்டதும் அதனை வழங்க நடவடிக்கைகளை மேற்கொள்வோம் என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

லசந்த விக்கிரமதுங்க படுகொலை விசாரணை சுருக்கத்தை; ...

2025-02-10 02:02:13
news-image

இழப்புக்களை ஏற்படுத்த தூண்டியவர்களை இனங்கண்டுள்ளோம்; அவர்களுக்கெதிராக...

2025-02-10 01:54:10
news-image

நாடளாவிய ரீதியில் ஏற்பட்ட திடீர் மின்தடை ...

2025-02-10 01:46:26
news-image

எந்தவொரு வெளிநாட்டு வேலை வாய்ப்பு முகவர்...

2025-02-09 15:15:31
news-image

பேச்சுவார்த்தைகளில் இணக்கப்பாடு இன்றேல் நிச்சயம் நாட்டுக்கு...

2025-02-09 15:22:37
news-image

ஜனாதிபதி நீதித்துறை கட்டமைப்பில் தலையீடு செய்யப்போவதில்லை...

2025-02-09 19:41:29
news-image

Clean sri lanka நிகழ்ச்சித் திட்டம்...

2025-02-09 23:19:15
news-image

யாழ். பல்கலைக்கழக முகாமைத்துவபீட மாணவர்களிடையே மோதல்...

2025-02-09 22:25:18
news-image

பா.உறுப்பினர்கள்122 கோடி ரூபா இழப்பீடு பெற்றுக்கொண்டமை...

2025-02-09 17:13:39
news-image

வீடுகளுக்கு தீ வைத்ததாலே அரங்கத்துக்கு நஷ்டஈடு...

2025-02-09 17:28:01
news-image

அதிபர் - ஆசிரியர் தொழிற்சங்கங்களுக்கும் பிரதமருக்கும்...

2025-02-09 19:55:46
news-image

எம்.பிக்களுக்கு 122 கோடி ரூபா இழப்பீடு...

2025-02-09 17:19:20