(இராமேஸ்வரத்திலிருந்து ஆ.பிரபுராவ்)
ராமேஸ்வரம் கோயில் ஆடித்தோராட்டம் இன்று நடைபெற்றது. வெளிமாநிலத்தவர் ஏராளமானோர் பங்கேற்றனர்.
தீர்தம், மூர்த்தி, தலம் ஆகிய முப்பெருமையுடைய ராமேஸ்வரம் புண்ணியதிருத்தலம் காசிக்கு நிகரானது இத்திருத்தலத்தில் கடந்த மாதம் 27 ஆம் திகதி கொடியேற்றத்தடன் ஆடித்திருவிழா ஆரம்பமானது.
தொடர்ந்து 17 நாட்கள் நடைபெறும் இத்திருவிழாவில் ஒன்பதாம் நாளான இன்று காலை 10.30 மணியளவில் கன்னிலக்கனத்தில் அருள்மிகு அம்பாள் ரதத்தில் எழுந்தருளினார் .
பின் உள்ளுர் மற்றும் வெளிமாநில பக்கத்தர்கள் இராம...இராம என பக்தி பரவசத்துடன் வடம்பிடித்து இழுத்தனர் .
அம்பாள் தேரோட்டம் நான்கு ரத வீதிகளில் வீதி உலாவந்து பக்கதர்களுக்கு அருள்பாலித்தார். விழாவின் முக்கிய நிகழ்வான எதிர்வரும் 6 ஆம் திகதி தபசுமண்டகப்படியும் 7 ஆம் திகதி அருள்மிகு பர்வதவர்த்தினி அம்பாளுக்கும்-அருள்மிகு இராமநாதசுவாமிக்கும் திருக்கல்யாண மண்டபத்தில் திருக்கல்யாண உற்சவம் நடைபெறவுள்ளது.
இதனையொட்டி தமிழகத்தில் பல்வேறு ஊர்களிலிருந்தும் வட மாநில பக்தர்களும் பல ஆயிரக்கணக்கானோர் ராமேஸ்வரம் வரவுள்ளனர். இதற்கான அடிப்படை வசதிகளை மாவட்ட நிர்வாகம் செய்துதரவேண்டும் என பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM