கடந்த 24 மணிநேரத்தில் கிழக்கு மாகாணத்தில் 38 கொவிட்19 தொற்றாளர்கள் அடையாளங் காணப்பட்டுள்ளதாக கிழக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் அழகையா லதாகரன் தெரிவித்தார்.
அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில், தொடர்ந்தும் பெறப்பட்ட பி.சி.ஆர், அன்டிஜன் பரிசோதனைகள் மூலமாக மொத்தமாக இது வரைக்கும் கிழக்கு மாகாணத்தில் 1,323 நபர்கள் கொவிட்19 தொற்றாளர்களாக அடையாளங்காணப்பட்டுள்ளார்கள்.
கிழக்கு மாகாணத்தில் உள்ள 1,323 கொவிட் தொற்றாளர்களில் இருந்து 539 நபர்கள் சிகிச்சை பெற்று வருவதுடன் 802 நபர்கள் குணமடைந்து வீடு திரும்பியுள்ளார்கள். கிழக்கு மாகாணத்தில் மொத்தமாக கொவிட் தொற்றால் 07 மரணங்கள் பதிவாகியுள்ளன. பிராந்திய ரீதியான பதிவுகளின் படி திருகோணமலையில் 173, மட்டக்களப்பில் 264, அம்பாறையில் 34, கல்முனை பிராந்தியத்தில் 852 என மொத்தமாக 1,323 கொவிட்19 தொற்றாளர்கள் இனங்காணப்பட்டார்கள்.
குறிப்பாக கொவிட் தொற்று அதிகளவான பரவல் இடமாக கல்முனை நகர், மட்டக்களப்பு, காத்தான்குடி, திருகோணமலையில் நகர் பகுதியில் மூன்று கிராம சேவகர் பிரிவுகளான ஜின்னா நகர், முருகாபுரி, அபயபுர என்ற அடிப்படையில் மூன்று கிராம சேவகர் பிரிவுகளும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.
இதற்காக மக்களின் ஒத்துழைப்பு பூரணமாக வழங்கப்பட வேண்டும். அவ்வாறு வழங்காவிட்டால் தனிமைப்படுத்தல் தொடரலாம் என்றார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM