மாலியில் சனிக்கிழமையன்று இரு பிரான்ஸ் வீரர்கள் கொல்லப்பட்டதாக ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரேனின் அலுவலகம் தெரிவித்துள்ளது.
மாலியின் கிழக்கு பிராந்தியமான மேனகாவில் சனிக்கிழமையன்று மேற்கொள்ளப்பட்ட தாக்குதலின் போதே பிரான்ஸ் படையின் சார்ஜென்ட் யுவோன் ஹுய்ன் என்ற 33 வயதுடைய பெண்ணொருவரும், பிரிகேடியர் லோயிக் ரிஸர் என்ற ஆணொருவருமே உயிரிழந்துள்ளதாக பிரான்ஸ் ஜனாதிபதி அலுவலகம் வெளியிட்ட அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இதேவேளை தாக்குதலில் காயமடைந்த மேலும் ஒரு வீரர் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
மாலியில் உள்ள அல்-கொய்தா பயங்கரவாதக் குழுவின் ஒரு கிளையான ஜமாஅ நுஸ்ரத் உல்-இஸ்லாம் வா அல்-முஸ்லிம் (JNIM) என்ற அமைப்பினர் இந்த தாக்குதலுக்கு பொறுப்பேற்றுள்ளதாக அமெரிக்காவை தளமாகக் கொண்ட ஜிஹாதிஸ்ட்-கண்காணிப்பு புலனாய்வு குழுவொன்று (SITE) தெரிவித்துள்ளது.
குறித்த அமைப்பினர் மாலியில் இருந்து பிரான்ஸ் படைகளை திரும்பப் பெற வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளதாக தெரிவித்துள்ளது.
கடந்த டிசம்பர் 29 ஆம் திகதி மாலியின் மத்திய மொப்தி மாகாணத்தின் ஹோம்போரி பகுதியில் முன்னெடுக்கப்பட்ட ஒரு தாக்குதலின் போதும் மூன்று பிரான்ஸ் வீரர்கள் உயிரிழந்தமையும் குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM