பாகிஸ்தானில் இந்துக் கோவில் இடிக்கப்பட்டதைக் கண்டித்து ஏராளமான இந்துக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
வடமேற்குப் பாகிஸ்தானில் கரக் நகரில் இருந்த 100 ஆண்டுகள் பழமையான இந்துக் கோவிலை கடந்த புதன்கிழமை அடிப்படை மதவாத கும்பல் ஒன்று இடித்து தீ வைத்தது. இதனால் கோவில் தரைமட்டமானது
இந்த சம்பவத்தைக் கண்டித்து கராச்சியில் உயர் நீதிமன்றத்திற்கு வெளியே இந்துக்கள் பதாகைகளை ஏந்தி கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
நீதி வேண்டும் நீதி வேண்டும் என்று முழக்கமிட்ட அவர்கள், கோவிலை இடித்த குற்றவாளிகளுக்கு கடும் தண்டனை விதிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினர்.
அண்மையில் இந்துக் கோவில் ஒன்றை அமைக்க பிரதமர் இம்ரான் கான் அரசு அனுமதி வழங்கிய நிலையில் இச்சம்பவம் பலரையும் அதிர்ச்சியடைய செய்துள்ளது.
இதேவேளை இந்து கோவிலை இடித்தமைக்காக 30 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM