வெவ்வேறு வாகன விபத்துக்களில் பெண்ணொருவர் உட்பட நால்வர் பலி 

Published By: Digital Desk 4

01 Jan, 2021 | 05:18 PM
image

(செ.தேன்மொழி)

நாட்டின் நான்கு வேறுபட்ட பகுதிகளில் இடம்பெற்ற வாகன விபத்துகளில் சிக்கி பெண்ணொருவர் உட்பட நால்வர் உயிரிழந்துள்ளனர். இதன்போது நால்வர் காயமடைந்துள்ளதாகவும் பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்தது.

எல்ல

எல்ல பொலிஸ் பிரிவுக்குட்பட்ட எல்ல - வெல்லவாய பிரதான வீதியில் சாரதி உட்பட இருவர் பயணித்த முச்சக்கர வண்டி வீதியை விட்டு விலகிச் சென்று பள்ளத்தில் வீழ்ந்து விபத்து ஏற்பட்டுள்ளது.

இதன்போது படுகாயமடைந்த முச்சக்கர வண்டியின் சாரதியும், அதில் பயணித்த மற்றைய நபரும் தெமோதர வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதனைத் தொடர்ந்து சாரதி சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

வெல்லவாய பகுதியைச் சேர்ந்த 61 வயதுடைய நபரொருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக பொலிஸார் அடையாளம் கண்டுள்ளனர்.

கட்டுவன

கட்டுவன பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மித்தனிய - வலஸ்முல்ல வீதியில் சாரதி உட்பட நால்வர் பணித்த முச்சக்கர வண்டி சாரதியின் கட்டுப்பாட்டை இழந்து ,வீதியை விட்டு விலகிச் சென்று நிறுத்தி வைக்கப்பட்டிருந்த முச்சக்கர வண்டியுடன் மோதியுள்ளதுடன்,பின்னர் அருகிலிருந்த மின்கம்பத்தின் மீதும்  மோதி விபத்நு ஏற்பட்டுள்ளது.

இதன்போது படுகாயமடைந்த சாரதியும்,பயணிகள் மூவரும் சிகிச்சைக்காக எம்பிலிபிட்டி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதனைத் தொடர்ந்து பயணி ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

வலஸ்முல்ல பகுதியைச் சேர்ந்த 61 வயதுடைய ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

பன்னல

பன்னல பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பன்னல - குளியாப்பிட்டி வீதியில் மோட்டார் சைக்கிள் ஒன்று முன்னால் சென்ற டிப்பர் ரக வாகனமொன்றை முன்னோக்கி செல்ல முற்படும்போது  எதிர் திசையில் வந்த வேனுடன் நேருக்கு நேர் மோதி விபத்து ஏற்பட்டுள்ளது. 

இதன்போது படுகாயமடைந்த மோட்டார் சைக்கிளின் ஓட்டுனர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் உயிரிழந்துள்ளார்.

யக்வில பகுதியைச் சேர்ந்த 39 வயதுடைய நபரொருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

இறக்குவானை

இறக்குவானை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட எம்பிலிபிட்டி - இரத்தினபுரி பிரதான வீதியில் மோட்டார் சைக்கிள் ஒன று பாதசாரதி பெண்ணொருவரின் மீது மோதி விபத்தொன்று ஏற்பட்டுள்ளது. விபத்தின் போது படுகாயமடைந்த பெண் இரத்தினபுரி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் உயிரிழந்துள்ளார்.

எம்பிலிபிட்டி பகுதியைச் சேர்ந்த 65 வயதுடைய பெண்ணொருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக பொலிஸார் அடையாளம் கண்டுள்ளனர்.

மேற்படி விபத்துகள் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மக்கள் விடுதலை முன்னணியினால் அன்று செய்த...

2024-04-20 01:44:10
news-image

சு.க. ஆதரவாளர்கள் ஐக்கிய மக்கள் சக்தியுடன்...

2024-04-20 00:07:16
news-image

ஈரானிய ஜனாதிபதியின் விஜயம் தொடர்பில் எதிர்ப்பை...

2024-04-20 00:05:28
news-image

துன்பப்படும் மக்களுக்கு பக்கபலத்தை வழங்கிய சிறந்ததொரு...

2024-04-19 23:45:02
news-image

கடற்படை வீரர்கள் இருவர் உட்பட 4...

2024-04-19 22:16:12
news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58