மீன்பிடி தொடர்பான இலங்கை - இந்திய செயற்பாட்டுக்குழுவின் 4 ஆவது இணையவழி மாநாடு

Published By: Digital Desk 4

31 Dec, 2020 | 05:41 PM
image

(நா.தனுஜா)

மீன்பிடி தொடர்பான இலங்கை - இந்திய செயற்பாட்டுக்குழுவின் 4 ஆவது இணையவழி மாநாடு நேற்று புதன்கிழமை நடைபெற்றது. இதன்போது இருநாடுகளுக்கும் பொதுவான மீன்பிடித்துறைசார் பிரச்சினைகள் குறித்து ஆராயப்பட்டது.

இதில் இலங்கை சார்பில் மீன்பிடித்துறை அமைச்சின் செயலாளர் ஆர்.எம்.ஐ.ரத்நாயக்க தலைமையிலான குழுவும் இந்தியாவின் சார்பில் மீன்பிடித்துறை அமைச்சின் கீழான மீன்பிடி திணைக்களத்தின் செயலாளர் கலாநிதி ரஜீவ் ரஞ்சன் தலைமையிலான குழுவும் கலந்துகொண்டது.

இந்த மாநாட்டில் இருநாடுகளுக்கும் பொதுவான மீன்பிடித்துறைசார் பிரச்சினைகள் தொடர்பில் விசேடமாகக் கவனம் செலுத்தப்பட்டது.

குறிப்பாக இலங்கையின் கடல் எல்லையில் இந்திய மீனவர்கள் சட்டரீதியான மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபடுவதை உறுதிசெய்வது குறித்து அவதானம் செலுத்தப்பட வேண்டும் என்று இலங்கை பிரதிநிதிகள் வலியுறுத்தினர். 

சட்டவிரோதமான மீன்பிடி நடவடிக்கைகளினால் இலங்கை மீனவர்களின் மீன்பிடி உபகரணங்களும் அவர்களின் வாழ்வாதாரமும் பாதிப்படைவதாகவும் சுட்டிக்காட்டப்பட்டது.

இவ்விடயத்தில் தமது தரப்பில் முன்னெடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் மற்றும் சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபடுவோருக்கு எதிரான நடவடிக்கைகள் குறித்து இந்தியாவின் சார்பில் கலந்துகொண்ட பிரதிநிதிகள் விளக்கமளித்தனர்.

அத்தோடு இதுவிடயத்தில் இருநாடுகளுக்கும் இடையில் முறையான செயற்திட்டமொன்றை உருவாக்கிக்கொள்வதன் ஊடாகவே சிறந்த பெறுபேறைப் பெறமுடியும் என்றும் இருநாட்டின் பிரதிநிதிகளும் குறிப்பிட்டனர்.

அதேவேளை இலங்கை அதிகாரிகளால் கைதுசெய்யப்பட்ட இந்திய மீனவர்களின் விடுதலையை விரைவுபடுத்துமாறும் இந்தியாவின் பிரதிநிதிகள் கேட்டுக்கொண்டனர். 

அதற்குப் பதிலளித்த இலங்கை பிரதிநிதிகள், சட்டத்தின் பிரகாரம் உரிய செயற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு அவர்கள் விடுதலை செய்யப்படுவார்கள் என்று உறுதியளித்தமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

நன்னடத்தை பாடசாலை மேற்பார்வையாளர் பெண்ணிற்கு மீண்டும்...

2024-03-28 16:49:05
news-image

பாராளுமன்றம் ஏப்ரல் 01ஆம் திகதி மற்றும்...

2024-03-28 16:28:48
news-image

பெருந்தோட்ட கம்பனிகள் சமர்ப்பித்த முன்மொழிவை நிராகரித்த...

2024-03-28 16:19:07
news-image

கெஹெலிய ரம்புக்வெல்லவிற்கு மீண்டும் விளக்கமறியல்

2024-03-28 16:14:07
news-image

கொழும்பு கிராண்ட்பாஸ் பகுதியில் தீ பரவல்

2024-03-28 15:52:31
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம் 

2024-03-28 16:02:37
news-image

மீண்டும் அதிகரித்த தங்கத்தின் விலை!

2024-03-28 14:48:17
news-image

மக்களின் துயரங்களுக்கு தீர்வு காண நாட்டின்...

2024-03-28 14:26:10
news-image

இருவரைச் சுட்டுக் கொன்ற சம்பத் சமிந்தவின்...

2024-03-28 16:00:53
news-image

மாதமொன்றுக்கு 6 இலட்சம் கோழி முட்டைகள்...

2024-03-28 13:56:01
news-image

கத்தரிக்கோலால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை ;...

2024-03-28 12:03:22
news-image

ஆபாசப் படங்கள், நிர்வாணப் படங்கள் தொடர்பில்...

2024-03-28 12:07:47