மாகாணசபை  தேர்தலை நடத்தாமலிருக்கவே தீர்மானம் - பிரேம ஜயந்த

Published By: T Yuwaraj

30 Dec, 2020 | 10:56 PM
image

(இராஜதுரை ஹஷான்)

கொவிட்-19 வைரஸ் தாக்கத்துக்கு மத்தியில் மாகாண சபை தேர்தலை நடத்தாமலிருக்கவே தீர்மானிக்கப்பட்டுள்ளது. மாகாண சபை தேர்தலை நடத்துவதாயின் இரண்டு பிரதான விடயங்கள் குறித்து அவதானம் செலுத்த வேண்டும் என தொலைநோக்கு கல்வி இராஜாங்க அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்தார்.

பொதுஜன பெரமுன காரியாலயத்தில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக் கொண்டு கருத்துரைக்கையில்  மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில்,

மாகாண சபை தேர்தல் குறித்து தற்போது பேச்சுவார்த்தை முன்னெடுக்கப்படுகிறது. கொவிட்-19 வைரஸ் தாக்கத்துக்கு மத்தியில் பொதுத்தேர்தல் நடத்தப்பட்டது. கொவிட்-19 வைரஸ் தாக்கத்தின் முதல் அலையினை அரசாங்கம் வெற்றிகரமாக கட்டுப்படுத்தியதால் பாதுகாப்பான முறையில் பொதுத்தேர்தல் நடத்தப்பட்டது. ஆனால்  கொவிட்-19 வைரஸ் இரண்டாம் அலை குறுகிய காலத்துக்குள் தீவிரமடைந்துள்ளது.

நெருக்கடியான சூழ்நிலையில்  மாகாண சபை தேர்தலை நடத்தாமல் இருக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. மாகாண சபை தேர்தலை நடத்த வேண்டுமாயின் இரண்டு பிரதான விடயங்களில் கவனம் செலுத்த வேண்டும். மாகாண சபை தேர்தலை எந்த முறைமையில் நடத்துவது என்ற பிரச்சினை காணப்படுகிறது. கடந்த அரசாங்கம் தேர்தல் முறைமையில்  முரண்பாட்டை தோற்றுவித்துள்ளது.

தேர்தல் முறைமை குறித்து முரண்பாடற்ற தீர்மானத்தை பெற பல்வேறு தரப்பினருடன் பேச்சுவார்த்தை முன்னெடுக்க வேண்டும். ஆகவே அதற்கான காலவகாசம்  போதாது. அத்துடன் மாகாண சபை தேர்தலை கொவிட்-19 வைரஸ் தாக்கத்துக்கு மத்தியில் நடத்த முடியாது. ஆகவே  நெருக்கடியான சூழ்நிலையிலும் மாகாண சபை தேர்தலை நடத்தாமலிருக்கவே தற்போது தீர்மானிக்கப்பட்டுள்ளது என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஒரு தேசமாக நாம் முன்னேற சட்டத்துறை...

2023-06-04 17:55:42
news-image

தேர்தலை நடத்தாமல் மக்களாணையை மதிப்பிட முடியாது...

2023-06-04 17:20:57
news-image

புதிய வீட்டில் கோட்டாபய

2023-06-04 16:59:33
news-image

டெங்கு ஒழிப்பு உதவியாளர்கள் போன்று பாசாங்கு...

2023-06-04 17:00:40
news-image

யாழ். பல்கலை துணைவேந்தர் பதவிக்கு நான்கு...

2023-06-04 16:55:10
news-image

தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் வடமராட்சி...

2023-06-04 17:02:10
news-image

தொலைநோக்குடைய தலைமையொன்றே நாட்டுக்கு அவசியம் -...

2023-06-04 15:53:05
news-image

எஹலியகொட பன்னிலவில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு...

2023-06-04 15:27:57
news-image

நாட்டில் இயல்பு நிலையை ஏற்படுத்துவது நம்...

2023-06-04 14:41:24
news-image

மூன்று மாதங்களுக்குள் உண்மை மற்றும் நல்லிணக்க...

2023-06-04 14:18:56
news-image

சிறுநீர் பாதையிலிருந்து இரத்தம் கசியும் வரை...

2023-06-04 14:02:53
news-image

புலம்பெயர் நிகழ்ச்சி நிரல்களுக்குள் சிக்காதீர்கள் -...

2023-06-04 13:45:02