சிரியாவின் தலைநகர் டமாஸ்கஸ் பகுதியில் இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதல்களில் ஒருவர் உயிரிழந்ததுடன் மேலும் மூன்று வீரர்கள் காயமடைந்ததாக அரசு கட்டுப்பாட்டில் உள்ள சிரிய அரபு செய்தி நிறுவனமான சனா தெரிவித்துள்ளது.
அதன்படி டமாஸ்கஸ் கிராமப்புறங்களில் உள்ள நபி ஹபீல் அமைந்துள்ள சிரிய வான் பாதுகாப்புப் பிரிவை இலக்காகக் இஸ்ரேல், புதன்கிழமை அதிகாலை 1.30 மணியளவில் வடக்கு கலிலி பகுதியிலிருந்து ராக்கெட் தாக்குதல்களை முன்னெடுத்துள்ளது.
இதன்போது சிரிய வான் பாதுகாப்பு அமைப்பு சில ராக்கெட் தாக்குதல்களுக்கு பதிலடி கொடுத்து தடுத்து நிறுத்தியுள்ளது. இருந்தபோதும் இந்த அனர்த்தத்தின் விளைவாக ஒருவர் உயிரிழந்ததுடன், மூன்று வீரர்கள் காயமடைந்ததாகவும் சிரிய அரபு செய்தி நிறுவனம் சுட்டிக்காட்டியுள்ளது.
இதேவேளை சிரிய வான் பாதுகாப்பு தலைமையகம் மற்றும் டமாஸ்காஸின் கிராமப்புறங்களில் ஈரானிய போராளிகளின் தளங்களை குறிவைத்து இஸ்ரேல் தாக்குதல்களை முன்னெடுத்ததாக போர் கண்காணிப்பாளரான சிரிய மனித உரிமைகளுக்கான ஆய்வகமும் சுட்டிக்காட்டியுள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM