வவுனியா ஏ9 பிரதான வீதியில் பேயாடிகூழாங்குளம் பகுதியில் மரம் முறிந்து விழுந்ததில் குறித்த வீதியுடனான போக்குவரத்து ஒருமணி நேரம் தடைப்பட்டது.

குறித்த பகுதியில் நின்றிருந்த பழமையான புளியமரம் இன்று (28) இரவு 8 மணியளவில் வேரோடு சாய்ந்து மின்கம்பத்தையும் சேதப்படுத்திக்கொண்டு ஏ9 பிரதான வீதியின் குறுக்காக விழுந்தது.

குறித்த நேரத்தில் அவ்வீதியால் யாழில் இருந்து கொழும்பு நோக்கி பயணிகளை ஏற்றிக்கொண்டு அரச பேருந்து ஒன்றும் பயணித்திருந்தது. எனினும் மரம் முறிந்துவிழுவதை அவதானித்த பேருந்தின் சாரதி விரைந்து செயற்பட்டு பேருந்தினை வீதியின் கரையால் செலுத்தியமையால் பாரிய அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.

சம்பவ இடத்திற்கு சென்ற பொலிசார் மற்றும் இராணுவத்தினர் மரத்தை வெட்டி அகற்றும் பணியில் ஈடுபட்டுள்ளனர். குறித்த விபத்தினால் ஏ9 வீதியுடனான போக்குவரத்து ஒரு மணிநேரம் தாமதமடைந்திருந்தது.
இதேவேளை வவுனியாவில் கடந்த சில நாட்களாக மழையுடனான காலநிலை நீடித்துவருகின்றமை குறிப்பிடத்தக்கது











கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM