(செ.தேன்மொழி)
ஹூங்கம பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கலமெட்டிய மீன்பிடி துறைமுகத்தில் இன்று அதிகாலை பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் மேற்கொள்ளப்பட்ட விசேட சோதனை நடவடிக்கைகளின் போது சட்டவிரோதமாக இந்நாட்டுக்கு எடுத்துவரப்பட்ட உலர்ந்த மஞ்சள் தொகையுடன் நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதன்போது மீன்பிடி படகொன்றை அவதானித்த விசேட அதிரடிப்படையினர் அதனை சோதனைக்குட்படுத்தியுள்ளனர். இதனைத் தொடர்ந்து குறித்த படகில் எடுத்து வரப்பட்ட 20 ஆயிரம் கிலோ கிராம் உலர்ந்ந மஞ்சள் தொகையும் கைப்பற்றப்பட்டுள்ளன.
இந்த மஞ்சள் தொகையை ஏற்றிச் செல்வதற்காக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இரு லொறிகளும் இதன்போது கைப்பற்றப்பட்டுள்ளன.
இந்த விவகாரம் தொடர்பில் கலமெட்டிய , குடாவெல்ல,கோட்டகொட மற்றும் பேருவளை பகுதியைச் சேர்ந்த சந்தேக நபர்கள் நால்வர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இவர்கள் இந்தியாவிலிருந்தே இந்த மஞ்சள் தொகையை கொண்டுவந்திருக்கலாம் என்று பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.
இந்நிலையில் இந்த கடத்தல் செயற்பாடுக்கு மேலும் சிலர் உதவி ஒத்தாசைகளை வழங்கியிருக்கலாம் என்று பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.
அதனால் இது தொடர்பில் பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் ஹூங்கம பொலிஸாருடன் இணைந்து விசேட விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM