மஹர சிறையில் உயிரிழந்தோருக்கு நீதியை பெற்றுக்கொடுப்பதில் இடையூறு - சட்டத்தரணி சேனக பெரேரா 

Published By: Digital Desk 4

25 Dec, 2020 | 04:31 PM
image

(நா.தனுஜா)

மஹர சிறைச்சாலை துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு நீதியைப் பெற்றுக்கொடுப்பதற்கு இடையூறை ஏற்படுத்தும் விதமான நடவடிக்கைகள் நீதிமன்றத்திற்கு உள்ளேயும் வெளியேயும் மேற்கொள்ளப்படுகின்றன என்று சிறைக்கைதிகளின் உரிமைகளைப் பாதுகாப்பதற்கான அமைப்பின் தலைவர் சட்டத்தரணி சேனக பெரேரா விசனம் வெளியிட்டிருக்கிறார்.

கொழும்பில் இன்று வெள்ளிக்கிழமை ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து வெளியிடுகையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். 

அங்கு அவர் மேலும் கூறியதாவது:

மஹர சிறைச்சாலையில் நவம்பர் 29 ஆம் திகதி இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டு சம்பவத்தினால் 11 கைதிகள் உயிரிழந்திருப்பதுடன் நூற்றுக்கும் அதிகமான கைதிகள் காயமடைந்திருக்கிறனர். இச்சம்பவத்தினால் பாதிக்கப்பட்டவர்களுக்கான நீதியைப் பெற்றுக்கொடுப்பதற்குத் தொடர்ச்சியாகப் போராடிவருகின்றோம்.

அண்மைக்காலத்தில் இதனை மூடிமறைக்கும் வகையில் பல்வேறு செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டமையை நாங்கள் அவதானித்திருக்கின்றோம். இதற்குப் பொறுப்புக்கூறவேண்டிய அமைச்சர்கள் கூட, குற்றவாளிகளை சட்டத்தின் முன்னிருந்து காப்பாற்றுவதற்கான நடவடிக்கைகளையே மேற்கொண்டு வந்திருக்கிறார்கள்.

ஆகையினாலேயே உயிரிழந்தவர்களைப் பிரேதப்பரிசோதனைக்கு உட்படுத்துமாறு நாம் வலியுறுத்தினோம். அந்தவகையில் இதுவரையில் பிரேதப்பரிசோதனை முன்னெடுக்கப்பட்ட எட்டுப்பேரும் துப்பாக்கிச்சூட்டின் விளைவாகவே உயிரிழந்திருக்கிறார்கள். எனினும் நீதிமன்றத்திற்கு உள்ளேயும் வெளியேயும் இச்சம்பவத்திற்கு நீதியைப் பெற்றுக்கொடுப்பதற்கு எதிராகப் பல்வேறு இடையூறுகள் ஏற்படுத்தப்படுகின்றன.

இவ்வழக்கு நேற்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதும் அரசாங்கத்தின் சார்பில் ஆஜரான சட்டமாதிபரின் பிரதிநிதி, 'பாதிக்கப்பட்டவர்களின் சார்பில் ஆஜராவதற்கு என்ன உரிமை இருக்கின்றது?' என்று கேள்வி எழுப்புகின்றார். அவர் இவ்வாறு கேள்வி எழுப்புவது மிகவும் கவலைக்குரிய விடயமாகும்.

மஹர சிறைச்சாலை மோதல் சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினர், அவர்கள் சார்பில் ஆஜராகுமாறு சத்தியக்கடதாசி மூலம் எமக்கு அனுமதி வழங்கியிருக்கிறார்கள். அவ்வாறிருக்கையில் அரசதரப்பு சட்டத்தரணி இவ்வாறு கேள்வி எழுப்புவது, இச்சம்பவத்தை மூடிமறைப்பதற்கு ஆளுந்தரப்பின் அமைச்சர்கள் முன்னெடுத்திருக்கும் முயற்சியின் ஓரங்கமா என்ற சந்தேகம் எமக்கு எழுகிறது என்று தெரிவித்திருக்கிறார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பண்டிகைக் காலத்தினை முன்னிட்டு ச.தொ.ச. ஊடாக...

2025-03-19 16:47:53
news-image

பாராளுமன்றத் தேர்தலில் கிடைத்த ஒத்துழைப்பைப் போல்...

2025-03-19 17:24:19
news-image

வவுனியாவில் இலங்கை தமிழ் அரசுக் கட்சி...

2025-03-19 17:25:34
news-image

கே.டி.குருசாமி தலைமையிலான அணியினர் வேட்பு மனு...

2025-03-19 17:10:17
news-image

வடக்கு மாகாணத்தில் பொருளாதார அபிவிருத்தியை மேம்படுத்துதல்...

2025-03-19 17:05:19
news-image

தேசியப் பொருளாதாரத்திற்கான பெண்களின் பங்களிப்பை அதிகரிக்க...

2025-03-19 16:59:03
news-image

ஐரோப்பிய ஒன்றியத்தின்இலங்கைக்கான தூதுவர் மற்றும் சபாநாயகருக்கிடையில்...

2025-03-19 16:45:11
news-image

கிராண்ட்பாஸ் துப்பாக்கிச் சூடு ; "சேதவத்தை...

2025-03-19 16:10:22
news-image

மதுபான போத்தல்களை ஏற்றிச் சென்ற பார...

2025-03-19 16:09:43
news-image

கைதான இந்திய மீனவர்களில் இருவருக்கு 6...

2025-03-19 16:16:23
news-image

“Clean Sri Lanka” வின் கீழ்...

2025-03-19 15:47:23
news-image

காணாமல்போன வனஜீவராசிகள் பாதுகாப்பு திணைக்கள அதிகாரியை...

2025-03-19 15:21:56