அத்தியாவசிய உணவுப்பொருட்களின் விலையை அடுத்தாண்டே கட்டுப்படுத்த முடியும் -  பந்துல 

Published By: Digital Desk 4

24 Dec, 2020 | 10:06 PM
image

(இராஜதுரை ஹஷான்)

கொவிட்-19 வைரஸ் தாக்கத்தினால் பூகோள மட்டத்தில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியில் இருந்து  எம்மால் மாத்திரம் உடனடியாக மீள முடியாது. மக்களின் வாழ்க்கை செலவுகள் தற்போது அதிகரித்துள்ளமைக்கு பல காரணிகள் செல்வாக்கு செலுத்துகின்றன. 

அத்தியாவசிய உணவு பொருட்களின் விலை 2021 ஆம் ஆண்டுக்கு பின்னரே கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்படும்.என வர்த்தகத்துறை அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்தார்.

இலங்கை மன்ற கல்லூரியில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக் கொண்டு கருத்துரைக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில்,

கொவிட்-19 வைரஸ் தாக்கம் முழு உலகிற்கும் சுகாதார மற்றும் பொருளாதார  மட்டத்தில் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. பல செல்வந்த நாடுகள் எம்மை காட்டிலும் பாதிக்கப்பட்டுள்ளன.

சர்வதேச மட்டத்தில் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இதன் தாக்கத்தில் இருந்து இலங்கை மாத்திரம் விடுப்பட முடியாது.

2 ஆம் உலக மகா யுத்தத்தினால் இலங்கைக்கு நேரடி தாக்கம் ஏற்படவில்லை ஆனால் பொருளாதார மட்டத்தில் தாக்கம் ஏற்பட்டன. 

கொவிட்-19 வைரஸ் தாக்கத்தாலும்  இந்நிலைமை தற்போது ஏற்பட்டுள்ளது. ஆகவே சர்வதேச பொருளாதார நெருக்கடியில் இருந்து  எம்மால் மாத்திரம் விடுப்பட முடியாது.

வாழ்க்கை செலவுகள் அதிகம் என எதிர்தரப்பினர் குற்றஞ்சாட்டுகிறார்கள். இறக்குமதி செய்யப்படும் பொருள்களின் விலை மாத்திரமே அதிகரிக்கப்பட்டுள்ளது.

2021 ஆம் ஆண்டுக்கு பின்னரே அத்தியாவசிய பொருட்களின் விலையினை குறைக்க முடியும். தற்போதைய நெருக்கடியான சூழ்நிலையில் அத்தியாவசிய உணவு பொருட்களின் விலையை கட்டுப்படுத்த முடியாது.

கொவிட்-19 வைரஸ் தாக்கத்தை கட்டுப்படுத்த எடுக்கும் தீர்மானங்கள் இனம்,மதம் மற்றும் மொழி ஆகிய காரணிகளை  கொண்டு எடுக்கவில்லை.

கொவிட்-19 வைரஸ் தாக்கத்தினால் உயிரிழப்பவர்களின்  உடலை தகனம் செய்யும் தீர்மானத்தை சுகாதார குழுவினரே எடுத்தனர். இவ்விடயத்தில்  அரசாங்கத்துக்கு எவ்வித தொடர்பும் கிடையாது என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தெவிநுவர துப்பாக்கிச் சூடு ; புத்தளத்திற்கு...

2025-03-27 12:56:16
news-image

கோடாவுடன் சந்தேகநபர் கைது !

2025-03-27 12:54:48
news-image

கிரிஷ் கட்டிட வழக்கு விசாரணைகளிலிருந்து மற்றுமொரு...

2025-03-27 12:21:18
news-image

இலங்கை கடற்பரப்பில் மீன் பிடித்த குற்றச்சாட்டில்...

2025-03-27 12:39:27
news-image

விமான எதிர்ப்பு தோட்டாக்களுடன் இராணுவ வீரர்...

2025-03-27 11:37:26
news-image

கற்களை ஏற்றிச் சென்ற பாரஊர்தி விபத்து

2025-03-27 12:02:05
news-image

கடற்சார் பொருளாதாரம் ஊடாக நாட்டுக்கு நன்மைகளை...

2025-03-27 11:54:43
news-image

தேயிலை ஏற்றுமதியில் இலங்கையை பின்னுக்கு தள்ளி...

2025-03-27 13:01:21
news-image

பாணந்துறை - இரத்தினபுரி வீதியில் திடீரென...

2025-03-27 11:26:19
news-image

மீனவ குடும்பங்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த அரசு...

2025-03-27 11:23:40
news-image

மன்னாரில் இருந்து சட்டவிரோதமாக குருணாகலுக்கு பீடி...

2025-03-27 11:23:14
news-image

இந்தியாவில் வசிக்கும் இலங்கை அகதிகள் தாய்நாட்டில்...

2025-03-27 11:03:55