போலி நாணயத்தாள்களுடன் மூவர் கைது

Published By: Vishnu

24 Dec, 2020 | 01:40 PM
image

(செ.தேன்மொழி)

பியகம பகுதியில் போலி நாணயத்தாள்களை தயாரித்து அவற்றை செல்லுபடியாகும் பணத்துடன் ஒன்று சேர்க்கும் மோசடியில் ஈடுபட்ட  மூன்று நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித்ரோஹண தெரிவித்தார்.

பியகம பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற தகவலுக்கமைய மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது போலி நாணயத்தாள்களை அச்சிட்ட பெண்ணொருவர் உட்பட மூன்று சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். 

இதன்போது இவர்களிடமிருந்து 14 போலி ஆயிரம் ரூபாய் நாணயத்தாள்களும், 33 250 ரூபாய் செல்லுபடியாகும் பணமும் கைப்பற்றப்பட்டுள்ளன.

சந்தேக நபர்களிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளுக்கமைய அவர்கள் தற்காலிகமாக வசித்து வந்த வீடொன்றிலிருந்து 5 போலி ஆயிரம் ரூபாய் நாணயத்தாள்களும், 11 860 ரூபாய் செல்லுபடியாகும் பணமும்  கைப்பற்றப்பட்டுள்ளன. 

சந்தேக நபர்கள் தங்களிடமிருந்த போலி நாணயத்தாள்களை கொடுத்து, செல்லுபடியான பணத் தொகையை பெற்றிருக்கலாம் என்று பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.

கடுவெல மற்றும் சிலாபம் ஆகிய பகிதிகளைச் சேர்ந்த 26,42,48 வயதுடைய மூன்று பேரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர். சந்தேக நபர்கள் இந்த போலி நாணயத்தாள்களை அச்சிட பயன்படுத்திய அச்சு இயந்திரம் மற்றும் முச்சக்கர வண்டி ஒன்றையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தமிழர் பிரச்சினைக்கான தீர்வு விடயத்தில் அரசாங்கத்தின்...

2025-02-15 16:38:58
news-image

சிவில் சமூக அமைப்புக்கள் மீதான அழுத்தங்கள்...

2025-02-15 16:38:19
news-image

இலங்கை தமிழரசுக் கட்சியின் மத்திய குழுக்கூட்டம்...

2025-02-15 14:38:44
news-image

நிலக்கரி, டீசல் மாபியாக்களை தலைதூக்கச் செய்து...

2025-02-15 16:37:11
news-image

உள்ளூராட்சி அதிகார சபைகள் சட்டமூலம் மீதான...

2025-02-15 20:33:34
news-image

முதலீட்டாளர்களை தக்க வைத்துக் கொள்ளாவிட்டால் வெளிநாட்டு...

2025-02-15 16:34:51
news-image

போலியான குற்றச்சாட்டுக்களை முன்வைத்து மக்களின் அரசாங்கத்தை...

2025-02-15 16:36:27
news-image

மீன்பிடி சட்டங்களை நடைமுறைப்படுத்தாமையால் தொடர்ந்தும் மீனவர்களுக்கு...

2025-02-15 17:52:46
news-image

அதிக விலைக்கு விற்பனை செய்வதற்காக மறைத்து...

2025-02-15 18:16:07
news-image

யாழில் பல்வேறு நிகழ்வுகளில் கலந்துகொண்டார் பிரதமர்...

2025-02-15 17:51:55
news-image

விபத்தில் சிக்கிய நாடாளுமன்ற உறுப்பினர் இளங்குமரன்...

2025-02-15 17:58:45
news-image

மன்னார் தீவில் மக்களின் வாழ்வியலை பாதிக்கும்...

2025-02-15 17:50:31