வெளவாலுக்கு வைத்த குறி மாறியதால் விபரீதம்: அவசர சிகிச்சைப் பிரிவில் தாதி - சந்தேக நபர் கைது..!

Published By: J.G.Stephan

23 Dec, 2020 | 01:32 PM
image

மட்டக்களப்பில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவமொன்றில் தாதியொருவர் படுகாயமடைந்த நிலையில் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருப்பதாக மட்டக்களப்பு தலைமையக பொலிஸார் தெரிவித்தனர்.

மட்டக்களப்பு கண்ணகி அம்மன் கோவில் 3ம் குறுக்கு வீதியை அண்டியுள்ள வீட்டில் நேற்று செவ்வாய்க்கிழமை (22.12.2020) இரவு  9.30 மணியளவில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.

இந்த துப்பாக்கிச் சூட்டில் பூம்புகார், கண்ணகியம்மன் வீதியை சேர்ந்த மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில்  தலைமைத் தாதிய உத்தியோகத்தராக கடமையாற்றும் நடராஜா ராதா (வயது 55)  என்பவரே படுகாயமடைந்துள்ளாரென பொலிஸார் தெரிவித்தனர்.

பறவைகளை சுடும் எயார்கன் துப்பாக்கியைக் கொண்டு வீட்டின் மேல்மாடியில் இருந்து மரத்தில் இருந்த வெளவால் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதில்  எதிர்வீட்டில் இருந்து வெளியில் வந்த தாதி மீது குறி தவறி குண்டு பாய்ந்துள்ளது.

இதில் தலைமைத் தாதிய உத்தியோகத்தர் படுகாயமடைந்துள்ளார். இதனையடுத்து படுகாயமடைந்த  தாதி மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இந்த நிலையில், துப்பாக்கி சூடு நடத்திய சந்தேக நபரை பொலிஸார் கைது செய்துள்ளதோடு, குறித்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

நிலக்கரி, டீசல் மாபியாக்களை தலைதூக்கச் செய்து...

2025-02-15 16:37:11
news-image

உள்ளூராட்சி அதிகார சபைகள் சட்டமூலம் மீதான...

2025-02-15 20:33:34
news-image

முதலீட்டாளர்களை தக்க வைத்துக் கொள்ளாவிட்டால் வெளிநாட்டு...

2025-02-15 16:34:51
news-image

போலியான குற்றச்சாட்டுக்களை முன்வைத்து மக்களின் அரசாங்கத்தை...

2025-02-15 16:36:27
news-image

மீன்பிடி சட்டங்களை நடைமுறைப்படுத்தாமையால் தொடர்ந்தும் மீனவர்களுக்கு...

2025-02-15 17:52:46
news-image

அதிக விலைக்கு விற்பனை செய்வதற்காக மறைத்து...

2025-02-15 18:16:07
news-image

யாழில் பல்வேறு நிகழ்வுகளில் கலந்துகொண்டார் பிரதமர்...

2025-02-15 17:51:55
news-image

விபத்தில் சிக்கிய நாடாளுமன்ற உறுப்பினர் இளங்குமரன்...

2025-02-15 17:58:45
news-image

மன்னார் தீவில் மக்களின் வாழ்வியலை பாதிக்கும்...

2025-02-15 17:50:31
news-image

ஹர்ஷவுக்கு ஏன் கொழும்பு மாவட்ட தலைவர்...

2025-02-15 14:40:41
news-image

நுரைச்சோலை மின்னுற்பத்தி இயந்திரங்கள் மீண்டும் செயற்பட...

2025-02-15 16:34:16
news-image

தம்பகல்ல பகுதியில் சட்டவிரோதமாக புதையல் தோண்டிய...

2025-02-15 15:42:37