கிழக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி வைத்தியர் அழகையா லதாகரன் இன்று (21) திருகோணமலையில் உள்ள கிழக்கு மாகாண சுகாதார சேவைகள் திணைக்களத்தில் ஊடகவியலாளர் சந்திப்பு ஒன்றை மேற்கொண்டார்.
திருகோணமலை ஜமாலியா இறைச்சிக் கடையில் பணிபுரிபவரின் உறவினர்கள் மேலும் 15 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்ட நிலையில் திருகோணமலை மாவட்டத்தின் இன்றைய நிலைமை குறித்து அவர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில்,
கிழக்கில் இதுவரை 778 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
திருகோணமலையில் 40 பேரும், மட்டக்களப்பில் 102 பேரும், அம்பாறையில் 23 பேரும், கல்முனையில் 613 பேருக்கும் தொற்றுக்குள்ளாகியுள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.
கடந்த 24 மணித்தியாளங்களில் திருகோணமலை மாவட்டத்தில் தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. நேற்று மாத்திரம் திருகோணமலை மாவட்டத்தில் 653 பேருக்கு பி.சி.ஆர். பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு இருக்கின்றது.
அதில் பாடசாலை மாணவர்கள் திருகோணமலை ஜமாலியாவில் 04 பேரும், கிண்ணியாவில் 02 பேருக்கும் தொற்று இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக மாவட்டத்தில் ஜமாலியா, துளசிபுரம், முருகாபுரி, கிண்ணியா பகுதிகளில் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM