இருவேறு சம்பவங்களில் இருவர் கொலை !

21 Dec, 2020 | 02:17 PM
image

நாட்டில் நேற்று இடம்பெற்ற இருவேறு சம்பவங்களில் இருவர் கொலைசெய்யப்பட்டுள்ளனர்.

கொழும்பு, பொரளை  வனாத்தமுல்ல  பகுதியில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

குறித்த நபர் தனிப்பட்ட தகராறு காரணமாக கொலை செய்யப்பட்டிருக்கலாமென தெரிவிக்கும் பொலிஸார் இந்த சம்பவம் நேற்றிரவு இடம்பெற்றுக்கதாக தெரிவித்துள்ளனர். 

உயிரிழந்தவர் பொரளை, சரணபால மாவத்தை பகுதியை சேர்ந்த 58 வயதுடைய நபரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். 

இந்த சம்பவம் தொடர்பில் சந்தேகநபர் ஒருவர் கைதுசெய்ப்பட்டுள்ளதாகவும் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் பொரளை பொலிஸார் தெரிவித்தனர்.

இதேவேளை,ஹம்பாந்தோட்டை கண்ணொருவ பகுதியில் இரு தரப்பினர்களுக்கிடையில் ஏற்பட்ட வாக்குவாதத்தினால் 27 வயதுடைய இளைஞன் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

இந்த கொலை சம்பவம் நேற்றிரவு இடம்பெற்றுள்ள நிலையில் கொலைச் சம்பவம் தொடர்பில் நால்வர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். 

கைதுசெய்யப்பட்டவர்களில் இருவர் ஹம்பாந்தோட்டை வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவரும் நிலையில், ஹம்பாந்தோட்டை பொலிஸார் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மாறி மாறி வருகின்ற அரசாங்கத்துடன் கூட்டு...

2024-04-16 17:03:46
news-image

தமிழ் மக்களின் சுமைதாங்கும் தர்ம தேவதையாக...

2024-04-16 16:32:21
news-image

நுவரெலியா - லிந்துலை சிறுவர் பராமரிப்பு...

2024-04-16 16:28:10
news-image

சட்டவிரோதமாக காணிக்குள் நுழைந்து பெண்ணின் 14...

2024-04-16 16:23:03
news-image

நானுஓயா ரயில் நிலையத்தில் பயணிகள் அவதி!

2024-04-16 16:05:39
news-image

புத்தாண்டு நிகழ்வில் கிரீஸ் மரம் சரிந்து...

2024-04-16 16:02:02
news-image

முட்டை விலை அதிகரிப்பினால் கேக் உற்பத்தி...

2024-04-16 14:59:40
news-image

உலகில் மிகவும் சுவையான அன்னாசிப்பழத்தை இலங்கையில்...

2024-04-16 14:28:01
news-image

கொழும்பு தேசிய வைத்தியசாலையில் வழங்கப்படும் உணவுகள்...

2024-04-16 14:22:41
news-image

மரக்கறிகளின் விலைகள் குறைவடைந்தன!

2024-04-16 14:35:09
news-image

கொழும்பு கோட்டை ரயில் நிலைய மேடையை...

2024-04-16 13:46:47
news-image

ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவது குறித்து சில...

2024-04-16 13:15:21