(இராஜதுரை ஹஷான்)
விமான நிலையம் எதிர்வரும் 26 ஆம் திகதி திறந்த பின்னர் வெளிநாடுகளில் உள்ள இலங்கையர்கள் வெளிவிவகார அமைச்சின் அனுமதியின்றி இனி நாட்டிற்கு வருகைத் தர முடியும் என சிவில் விமான சேவைகள் அதிகார சபையின் தலைவர் உபுல் தர்மதாஸ தெரிவித்துள்ளார்.
எதிர்வரும் 26 ஆம் திகதி முதல் அதற்கான அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
கொவிட் தொற்று பரவல் தீவிரமடைந்த காரணத்தினால் கடந்த மார்ச் மாதம் முதல் விமான நிலையங்கள் மூடப்பட்டன. வெளிநாடுகளில் நெருக்கடிகக்குள்ளான இலங்கையர்கள், வெளிவிவகார அமைச்சின் அனுமதியை பெற்றே, நாட்டிற்கு இதுவரை அழைத்து வரப்பட்டனர்.
இந்த நிலையில் எதிர்வரும் 26 ஆம் திகதி முதல் வழமை போன்று நாட்டிற்கு வருவதற்கான அனுமதி வழங்கப்படுகின்றது. எனினும், சுகாதார நடைமுறைகள் உரிய வகையில் கடைபிடிக்கப்படும் .
நாட்டுக்குள் வரும் அனைவரும் பி்.சி.ஆர் பரிசோதனையினை முன்னெடுக்க வேண்டும். விமான நிலையத்தில் 3500 பி.சி.ஆர் பரிசோதனைகளை செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் ஒரு நாளைக்கு விமான நிலையத்தில் சுமார் 3500 பி.சி. ஆர் பரிசோதனைகளை முன்னெடுக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இலங்கைக்கு வருகைத் தரும் சுற்றுலா பயணிகளுக்கான சுகாதார வழிமுறைகள் தொடர்பில் உரிய தரப்பிற்கு அறிவிக்கப்பட்டுள்ளதாக சுகாதார தரப்பினர் தெரிவித்துள்ளனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM