பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜோன்சன் இங்கிலாந்தில் உள்ள மில்லியன் கணக்கான மக்கள் மீது கடுமையான கொரோனா வைரஸ் கட்டுப்பாடுகளை விதித்துள்ளார்.
மேலும் கொரோனா வைரஸ் தொற்றினை கட்டுப்படுத்துவதற்கான போராட்டங்களை பிரிட்டன் முன்னெடுத்து வரும் நிலையில், கிறிஸ்மஸ் மீதான கட்டுப்பாடுகளை எளிதாக்கும் திட்டங்களையும் பெருமளவில் மாற்றியமைத்துள்ளார்.
இது தொடர்பில் சனிக்கிழமையன்று ஒரு செய்தியாளர் மாநாட்டில் பேசிய அவர், நாங்கள் திட்டமிட்டபடி கிறிஸ்மஸைத் தொடர முடியாது என்று நான் உங்களுக்கு கூற வேண்டும் என்று தெரிவித்ததுடன், அதற்கான மாற்றுவழிகள் என்னிடம் இல்லை என்றும் சுட்டிக்காட்டினார்.
புதிய கட்டுப்பாடுகளின் கீழ் தொழில் போன்ற அத்தியாவசிய காரணங்களைத் தவிர்த்து மக்கள் வீட்டிலேயே இருக்க வேண்டியிருக்கும்.
மேலும் அத்தியாவசியமற்ற சில்லறை விற்பனை மூடப்படும், அதே போல் உட்புற ஓய்வு மற்றும் பொழுதுபோக்கு, சமூக கலவையானது வெளிப்புற இடத்தில் ஒருவரை சந்திப்பதற்கு மட்டுப்படுத்தப்படும்.
கிறிஸ்மஸுக்குப் பிறகு இங்கிலாந்துக்கு மூன்றாவது முடக்கல் நிலை அவசியமில்லை என்று தான் நம்புவதாக ஜோன்சன் மேலும் தெரிவித்துள்ளார்.
ஜோன்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழக தரவுகளின் படி பிரிட்டனில் 2,010,077 கொரோனா நோயாளர்கள் இதுவரை அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், 67,177 உயிரிழப்பு சம்பவங்களும் பதிவாகியுள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM