இருக்கைகளின் எண்ணிக்கையை விட அதிகமாக பயணிகளை ஏற்றினால் கடும் நடவடிக்கை - பொலிஸ்  பேச்சாளர்

Published By: Digital Desk 4

17 Dec, 2020 | 09:48 PM
image

(செ.தேன்மொழி)

பொது போக்குவரத்து நடவடிக்கையில் ஈடுபட்டு வரும்  பஸ்களில் இருக்கையின் எண்ணிக்கையை விட அதிகமாக பயணிகளை ஏற்றிச் சென்றால் சட்டநடவடிக்கை எடுக்கப்படும் என்று பொலிஸ் ஊடகப்பேச்சாளர் பிரதிப்பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறியதாவது,

தனிமைப்படுத்தல் சட்டவிதிகளுக்கு புறம்பாக செயற்படும் பொது போக்குவரத்து சாதனங்களுக்கு எதிராக சட்டநடவடிக்கை எடுக்குமாறு இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம பொலிஸ்மா அதிபருக்கு கடிதமொன்றை அனுப்பிவைத்தார். 

அது தொடர்பில் கவனம் செலுத்திய பொலிஸ் மா அதிபர் சீ்.டீ.விக்ரமரத்ன அது தொடர்பான சுற்றுநிரூபத்தை அனைத்து பொலிஸ் நிலையங்களுக்கும் அனுப்பியுள்ளார்.

இதேவேளை சுகாதார அமைச்சரினால் கடந்த அக்டோபர் மாதம் 15 ஆம் திகதி வெளியிடப்பட்ட விசேட வர்த்தமானியில் பொது வாகனங்கள் தொடர்பில் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அல்லது உரிய அதிகாரிகளே  தீர்மானிக்க வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. 

அதற்கமைய சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் வைத்தியர் அசேல குணவர்தன அது தொடர்பில் அறிக்கை வெளியிட்டிருந்ததுடன், அதில் பொது போக்குவரத்து நடவடிக்கையில் ஈடுபடும் பேரூந்துகளில் இருக்கையின் எண்ணிக்கைக்கு அமையவே பயணிகள் ஏற்றமுடியும் என்று குறிப்பிட்டுள்ளார்.

இந்நிலையில் , இந்த உத்தரவுக்கு புறம்பாக செயற்படும் பேரூந்துகளில் சாரதிகள் மற்றும் சாரதி உதவியாளர்களுக்கு எதிராக தண்டனை சட்டக்கோவை மற்றும் தனிமைப்படுத்தல் சட்டவிதுகளுக்கமைய சட்டநடவடிக்கை எடுக்கப்படும்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இன்றைய வானிலை

2025-03-22 06:14:23
news-image

யாழில் நண்பர்களுடன் கடலில் குளிக்க சென்ற...

2025-03-22 05:04:39
news-image

சர்வதேச பல்கலைக்கழகங்களை நாட்டுக்கு கொண்டுவர நடவடிக்கை...

2025-03-22 04:49:45
news-image

அரசாங்கம் விடுவித்த 323கொள்கலன்களும் யாருக்கு சொந்தமானவை;...

2025-03-22 04:45:51
news-image

யாழ்.நூல் எரிப்பு தொடர்பில் குழு அமைத்து...

2025-03-22 04:43:41
news-image

நாடளாவிய ரீதியில் 400க்கும் மேற்பட்ட வேட்புமனுக்கள்...

2025-03-22 04:39:00
news-image

நிவாரண பொதியில் உள்ளடங்குவது சமபோசாவா அல்லது...

2025-03-22 04:34:24
news-image

வட,கிழக்கின் தேவைகளை கண்டறிந்தே நிதியொதுக்கீட்டைச் செய்ய...

2025-03-22 04:27:18
news-image

மே மாதத்தில் 8,9ஆம் திகதிகளில் மாத்திரம்...

2025-03-22 04:24:35
news-image

மீண்டும் ஐ.தே.க. ஆட்சியமைப்பதற்காக தீவிரமாக செயற்படுகின்றோம்...

2025-03-22 04:15:02
news-image

பேருந்து நடத்துனர் - லண்டன் பெண்ணுக்கு...

2025-03-22 04:10:32
news-image

பிரதி சொலிசிட்டர் ஜெனரல் திலிப பீரிஸுக்கு...

2025-03-21 21:25:13