மஹர சிறைச்சாலை கலவரம்; ஏனைய 7 கைதிகளின் பிரேத பரிசோதனையின் பின் இறுதித் தீர்மானமாம்

Published By: Vishnu

17 Dec, 2020 | 10:19 AM
image

(எம்.எப்.எம்.பஸீர்)

மஹர சிறைச்சாலை கலவரத்தின் போது கைதிகள் நால்வர் துப்பாக்கிச் சூட்டிலேயே உயிரிழந்துள்ளமை பிரேத பரிசோதனையில் தெரியவந்துள்ளது.  

இந்த கலவரத்தில் உயிரிழந்த 11 கைதிகளில், இதுவரை நான்கு கைதிகள் தொடர்பில் பிரேத பரிசோதனைகள் நிறைவடைந்துள்ளன. அதன் அறிக்கை நேற்று வத்தளை நீதிவான் புத்திக ஸ்ரீ ராகலவுக்கு இரகசியமாக சிறப்பு நிபுணர் குழுவினரால் அனுப்பி வைக்கப்பட்டிருந்த நிலையில், அவ்வறிக்கை பிரகாரம் துப்பாக்கிச்சூட்டுக்கு இலக்கானமையே இவர்களது மரணத்திற்கான அடிப்படை காரணம்  என தெரிவிக்கப்பட்டுள்ளதாக நீதிவான் புத்திக ஸ்ரீ ராகல அறிவித்தார்.

எவ்வாறாயினும் மஹர சிறைச்சாலையில் ஏற்பட்ட கலவர நிலைமையின் போது  உயிரிழந்த நான்கு கைதிகளின் உடல்களை அடக்கம் செய்வதற்கு அனுமதி கோரி அவர்களது உறவினர்கள் விடுத்த கோரிக்கையை வத்தளை நீதவான் புத்திக ஶ்ரீ ராகல நிராகரித்ததுடன், கைதிகளின் உடல்களை உடனடியாக தகனம் செய்யுமாறும் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்திற்கு உத்தரவிட்டார்.

அதன் பின்னர் வழக்கின் மேலதிக விசாரணையை 18 ஆம் திகதி வரை ஒத்திவைத்த நீதவான் ஏனைய ஏழு கைதிகளினதும் பிரேத பரிசோனை அறிக்கைகளை அன்றைய தினம் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்குமாறும் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

கடந்த மாதம் 29 மற்றும் 30 ஆம் திகதிகளில் மஹர சிறைச்சாலையில் இடம்பெற்ற வன்முறைகளின் போது 11 கைதிகள் உயிரிழந்ததுடன், அவர்களில் 08 பேர் கொரோனா தொற்றுக்குள்ளானவர்கள் என உறுதி செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஜே.வி.பி. செய்த கொலைகளை மறைப்பதற்கு இடமளிக்கக்...

2025-03-16 16:20:41
news-image

அமைச்சர் நளிந்த வரலாற்றை மறந்துவிட்டார் :...

2025-03-16 20:34:58
news-image

பட்டலந்த விசாரணை ஆணைக்குழு அறிக்கை :சட்டமா...

2025-03-16 17:16:42
news-image

நாடளாவிய ரீதியில் அரச தாதியர் சங்கத்தினர்;...

2025-03-16 22:15:49
news-image

அரசாங்கத்தால் கட்டுப்படுத்த முடியாத அளவுக்கு பாதாளக்...

2025-03-16 17:16:18
news-image

வீடு ஒன்றில் இருந்து கணவன் மற்றும்...

2025-03-16 21:24:04
news-image

நோயாளிகளை சிரமப்படுத்தும் வகையில் செயல்பட்டால், மக்கள்...

2025-03-16 17:18:28
news-image

உள்ளூராட்சி மன்ற தேர்தலில் வேட்புமனுக்கள் நிராகரிக்கப்படாமல்...

2025-03-16 17:21:56
news-image

கல்வியை இலகுபடுத்தும் நோக்கில் ஆயிரம் பாடசாலைகளுக்கு...

2025-03-16 19:45:47
news-image

பல்வேறு குற்றச்செயல்களுடன் தொடர்புடைய இருவர் ஹெரோயினுடன்...

2025-03-16 20:28:10
news-image

சாதாரண தரப் பரீட்சைகள் நாளை ஆரம்பம்

2025-03-16 18:18:12
news-image

புழுதியாற்று ஏற்று நீர்பாசனத் திட்டத்தை பார்வையிட்டார்...

2025-03-16 17:35:19