(எம்.மனோசித்ரா)
வெளிநாட்டுகளிலிருந்து நாடு திரும்புபவர்களின் தனிமைப்படுத்தல் நடவடிக்கை தொடர்பாக சுகாதார அமைச்சினால் 06 விடயங்களை உள்ளடக்கிய வழிகாட்டல் ஆலோசனைகள் வெளியிடப்பட்டுள்ளன.
அதற்கமைய வெளிநாடுகளிலிருந்து வருகை தருகின்றவர்கள் கட்டாயமாக 14 நாட்கள் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதற்கமைய வெளிநாடுகளிலிருந்து வருகை தருகின்றவர்கள் பின்பற்றிய வேண்டிய சுகாதார வழிகாட்டல்களாக கூறப்பட்டுள்ளதாவது :
வெளிநாடுகளிலுள்ளவர்கள் நாட்டிற்குள் வந்த பின்னர் முதல் நாளில் அடிப்படை பி.சீ.ஆர் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட வேண்டும்.
அரசாங்க சுகாதார அதிகாரிகளின் மேற்பார்வையின் கீழ் 14 நாட்கள் தனிமைப்படுத்தல் காலத்திற்குள், அவர்கள் தனி அறையில் அல்லது இரண்டு பேர் சேர்ந்த அறையில் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட வேண்டும்.
இந்த அறையில் தனியான இயற்கை கழிவறை வசதிகள் இருக்க வேண்டும் என்பதுடன், தனிமைப்படுத்தப்பட்டுள்ள ஏனைய நபர்களுடன் இணைந்து பயன்படுத்தக்கூடாது.
தனிமைப்படுத்தல் காலத்திற்குள் எந்த வகையிலும் தனிமைப்பட்டுள்ள ஏனையவர்களுடன் நெருக்கமான தொடர்பைப் பேணவிடாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.
தனிமைப்படுத்தப்பட்ட காலத்தின் 12 – 14 ஆவது நாட்களுக்கு இடையில் மேற்கொள்ளப்படுகின்ற பி.சீ.ஆர் பரிசோதனைக்கு உட்படுத்தப்படுவது கட்டாயமாவதுடன், அதன் முடிவுகள் எதிர்மறையாக (Nagative) இருக்க வேண்டும்.
14 நாட்கள் தனிமைப்படுத்தல் கால முடிவின் போது அந்த நிலையத்தின் பொறுப்பாளர் மற்றும் பிரதேச சுகாதார அதிகாரி குறித்த நபரின் தனிமைப்படுத்தல் செயல்முறையில் திருப்தி அடைய வேண்டும்.
மேலும் குறிப்பிட்ட அடிப்படை விடயங்களையும் முழுமையாக பூர்த்தி செய்த நபர், மீண்டும் தமது வீட்டில் 14 நாட்கள் சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்த தேவையில்லை என்றும் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM