மஹர சிறைக் கைதிகளின் சடலங்களை அடக்கம் செய்வதா ? தகனம் செய்வதா ? - தீர்ப்பு இதோ!

Published By: Vishnu

16 Dec, 2020 | 02:05 PM
image

மஹர சிறைச்சாலையில்அண்மையில் ஏற்பட்ட அமைதியின்மை காரணமாக உயிரிழந்த 11 கைதிகளில் நால்வரின் சடலங்களை தகனம் செய்ய வத்தளை நீதிவான் நீதிமன்றம் இன்று உத்தரவு பிறப்பித்துள்ளது.

நவம்பர் 29 ஆம் திகதி மஹர சிறை மோதலில் உயிரிழந்த 11 பேரின் பிரேத பரிசோதனைக்காக நியமிக்கப்பட்ட நிபுணர் குழுவினால் தயாரிக்கப்பட்ட விசேட அறிக்கை இன்று வத்தளை நீதிமன்றில் சமர்ப்பிக்கப்பட்டது.

அதில் உயிரிழந்த கைதிகளில் நால்வர் துப்பாக்கிச் சூட்டுக்குள்ளாகி உயிரிழந்ததாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இந் நிலையில் பிரேத பரிசோதனைகள்  நிறைவு செய்யப்பட்ட நான்கு கைதிகளின் சடலங்களை இறுதி கிரியை மேற்கொள்வதற்காக அவர்களது உறவினர்களிடம் ஒப்படைக்குமாறு உயிரிழந்த கைதிகள் தரப்பு சட்டத்தரணிகள் கோரினர்.

எனினும் இதற்கு சட்ட மாஅதிபர் திணைக்களம் சார்பில் முன்னிலையான, சட்ட மா அதிபரின் இணைப்பாளர் நிஷாரா ஜெயரத்ன எதிர்ப்பை வெளியிட்டார்.

அவர்களின் சடலங்களை அடக்கம் செய்வதானது, சமுகத்துக்கு பாதிப்பை ஏற்படுத்தலாம் என்று அவர் நீதிமன்றில் சுட்டிக்காட்டினார்.

அதன் பின்னர் இரு தரப்பு விவாதங்களையும் ஆராய்ந்த வத்தளை நீதிவான் நீதிமன்ற நீதிபதி, சம்பவத்தில் உயிரிழந்த நான்கு சிறைக் கைதிகளின் சடலங்களை அரசாங்கத்தின் செலவிலும், கண்காணிப்பிலும் தகனம் செய்ப்படும் என்று கூறி உத்தரவு பிறப்பித்தார்.

குறித்த சடலங்களை தகனம் செய்யாமல் அடக்கம் செய்ய அனுமதி வழங்குமாறு உயிரிழந்த நபர்களின் உறவினர்கள் மற்றும் சட்டத்தரணிகள் நீதிமன்றில் கோரியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஜே.வி.பி. செய்த கொலைகளை மறைப்பதற்கு இடமளிக்கக்...

2025-03-16 16:20:41
news-image

அமைச்சர் நளிந்த வரலாற்றை மறந்துவிட்டார் :...

2025-03-16 20:34:58
news-image

பட்டலந்த விசாரணை ஆணைக்குழு அறிக்கை :சட்டமா...

2025-03-16 17:16:42
news-image

நாடளாவிய ரீதியில் அரச தாதியர் சங்கத்தினர்;...

2025-03-16 22:15:49
news-image

அரசாங்கத்தால் கட்டுப்படுத்த முடியாத அளவுக்கு பாதாளக்...

2025-03-16 17:16:18
news-image

வீடு ஒன்றில் இருந்து கணவன் மற்றும்...

2025-03-16 21:24:04
news-image

நோயாளிகளை சிரமப்படுத்தும் வகையில் செயல்பட்டால், மக்கள்...

2025-03-16 17:18:28
news-image

உள்ளூராட்சி மன்ற தேர்தலில் வேட்புமனுக்கள் நிராகரிக்கப்படாமல்...

2025-03-16 17:21:56
news-image

கல்வியை இலகுபடுத்தும் நோக்கில் ஆயிரம் பாடசாலைகளுக்கு...

2025-03-16 19:45:47
news-image

பல்வேறு குற்றச்செயல்களுடன் தொடர்புடைய இருவர் ஹெரோயினுடன்...

2025-03-16 20:28:10
news-image

சாதாரண தரப் பரீட்சைகள் நாளை ஆரம்பம்

2025-03-16 18:18:12
news-image

புழுதியாற்று ஏற்று நீர்பாசனத் திட்டத்தை பார்வையிட்டார்...

2025-03-16 17:35:19