கொழும்பில் 3 கொரோனா மரணங்கள் பதிவு : இலங்கையில் கொரோனா மரணங்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

Published By: J.G.Stephan

16 Dec, 2020 | 11:20 AM
image

இலங்கையில் மேலும் மூன்று  பேர் கொரோனா தொற்றுக்குள்ளாகி உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் உறுதிப்படுத்தியுள்ளார்.

அதன்படி, இலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளாகி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 157 ஆக அதிகரித்துள்ளமை குறிப்பிடதக்கது.

இந்நிலையில், கொழும்பு 14 பிரதேசத்தை சேர்ந்த 60 வயதுடைய பெண் ஒருவரும், கொழும்பு 15 பகுதியை சேர்ந்த 85 வயதுடைய ஆண் ஒருவரும் மற்றும் கொழும்பு 15 பகுதியை சேர்ந்த 84 வயதுடைய ஆண் ஒருவருமே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக அரசாங்கத் தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது. 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்