(க.பிரசன்னா)
கொவிட்-19 தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ள சுற்றுலாத்துறை சார்ந்தவர்களுக்கு தொடர்ந்தும் நிவாரணம் வழங்க அரசாங்கம் நடவடிக்கை மேற்கொண்டுள்ளதாக சுற்றுலாத்துறை அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.
காலி மாவட்ட செயலகத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலொன்றிலேயே இவ்வாறு குறிப்பிட்ட அவர், மேலும் தெரிவிக்கையில்,
சுற்றுலாத்துறை சார்ந்தவர்களுக்காக ஏற்கனவே பல சலுகைகள் வழங்கப்பட்டுள்ளன.
கொவிட் தொற்றினால் பாதிக்கப்பட்ட சுற்றுலாத் துறையை முன்னெடுத்துச் செல்வதற்காக வங்கிகள் மூலம் இதுவரை 150 மில்லியன் ரூபா வழங்கப்பட்டுள்ளது.
விமான நிலையத்தை திறந்தாலும் இந்தத் துறையை வழமைக்கு கொண்டுவர எவ்வளவு காலம் எடுக்கும் என்பதை உறுதியாகக் கூற முடியாது.
சுற்றுலாத்துறை வழமை நிலைக்குத் திரும்பும் வரை இந்தத் துறையில் ஈடுபட்டுள்ளவர்கள் தொடர்பில் கவனம் செலுத்துவது அரசாங்கத்தின் பொறுப்பாகும் என்று அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM