(எம்.மனோசித்ரா)
கொழும்பு - கண்டி பிரதான வீதியில் மோட்டார் சைக்கிள் ஓட்ட பந்தயம் நடத்திய சந்தேக நபருக்கு 90 ஆயிரம் ரூபா தண்டப்பணம் விதிக்கப்பட்டுள்ளது.
மூலப்பிரதியை மாற்றியமை , இலக்க தகடு இல்லாது உரிய வாகன அனுமதி பத்திரம் அற்ற நிலையில் பாதுகாப்பற்ற முறையில் மோட்டார் சைக்கிளை செலுத்தியமை ஆகிய குற்றங்களை குறித்த சந்தேக நபர் நீதிமன்றில் ஏற்றுக்கொண்ட நிலையில் கம்பஹா மேலதிக நீதவான் ஆர்.எஸ்.எம். மஹேந்திர ராஜா இந்தி உத்தரவை பிறப்பித்தார்.
கடவத்தை பகுதியில் வசிகும் மோட்டார் சைக்கிள் ஒட்டுநருக்கே இவ்வாறு தண்டப்பணம் விதிக்கப்பட்டது.
சம்பவ தினம் கடவத்தை அதிவேக வீதி உட்பிரவேசிக்கும் பகுதியிலிருந்து யக்கலை - கந்தகபாபு சந்தி வரையில் நள்ளிரவு 12 மணிதொடக்கம் அதிகாலை மோட்டார் சைக்கில் மற்றும் முச்சக்கர வண்டி பந்தயம் இடம்பெறுவதாக பொலிசாருக்கு தகவல் கிடைத்துள்ளது. இவ்வாறு பந்தயம் நடத்த கூடாது என எச்சரித்தும் கருத்தில் கொள்ளப்பட வில்லை.
இவ்வாறானதொரு நிலையிலேயே குறித்த சந்தேக நபர் நீதிமன்றில் ஆஜர்ப்படுத்தப்பட்டு தண்டப்பணம் விதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.















கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM