சர்வதேச விமான சேவைகளை ஆரம்பிக்க தீர்மானம் - சிவில் விமான சேவைகள் அதிகாரசபை

Published By: Digital Desk 4

13 Dec, 2020 | 09:57 PM
image

(க.பிரசன்னா)

இலங்கையிலிருந்து சர்வதேச விமான சேவைகளை இம்மாதம் 26 ஆம் திகதி முன்னெடுப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும் வர்த்தக விமான சேவைகளை முதலில் செயற்படுத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாகவும் சிவில் விமான சேவைகள் அதிகாரசபையின் தலைவர் உபுல் தர்மதாச தெரிவித்துள்ளார்.

நிலையான நேர அட்டவணையின்றி பயணிக்கும் விமானங்களின் செயற்பாடுகள் முன்னெடுக்கப்படவுள்ளதுடன் இந்த வேலைத்திட்டத்தின் கீழ் 4 விமான சேவைகளை ஆரம்பிப்பதற்கு எதிர்பார்க்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

இதற்கமைவாக இலங்கையில் அமைந்துள்ள யாழ்ப்பாணம், கட்டுநாயக்க, மத்தள மற்றும் மட்டக்களப்பு விமான நிலையங்களின் விமான சேவையை போன்று நிலையான நேர அட்டவணையின்றி பயணிக்கும் விமானங்களுக்கான நடவடிக்கைகள் மேற்கொள்வதற்கு அனுமதி கிடைக்கும்.

இதன்போது கடைப்பிடிக்க வேண்டிய நடைமுறைகள் மற்றும் பின்பற்ற வேண்டிய சுகாதார ஆலோசனைகள் பின்னர் வெளியிடப்படவுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். சர்வதேச விமான சேவைகளுக்காக இலங்கை மீண்டும் ஆரம்பிக்கப்படும் நிலையான கால அட்டவணை எதிர்காலத்தில் அறிவிக்கப்படவுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பாகிஸ்தான் உயர்ஸ்தானிகர் ஃபஹீம் உல் அஜீஸ்...

2025-04-20 09:04:31
news-image

கிறிஸ்துவின் உயிர்ப்பு விழாவை கொண்டாடும் அனைவருக்கும்...

2025-04-19 18:16:28
news-image

நீதி நிலை நாட்டப்படுவதை உறுதி செய்வதற்கான...

2025-04-19 18:17:18
news-image

குறுகிய அரசியல் நோக்கங்களை தள்ளிவைத்து உண்மையைக்...

2025-04-19 18:17:02
news-image

இன்றைய வானிலை

2025-04-20 06:05:02
news-image

6 மாதங்களில் 6000 பில்லியன் ரூபா...

2025-04-19 17:41:21
news-image

இலங்கையில் ஆயுதங்களை களஞ்சியப்படுத்த இந்தியாவுடன் இணக்கப்பாடு...

2025-04-19 14:28:57
news-image

புலம்பெயர் ஈழத்தமிழர்களை மகிழ்ச்சிப்படுத்தி வடக்கு, கிழக்கு...

2025-04-19 13:11:09
news-image

பொய் மற்றும் ஏமாற்று வித்தைகள் மூலம்...

2025-04-19 17:45:39
news-image

உள்ளுராட்சிசபைத் தேர்தலில் நுவரெலியா மாவட்டத்தில் 12...

2025-04-19 17:53:34
news-image

வன்னி காணி விடயங்கள், அபிவிருத்தி விடயங்கள்...

2025-04-19 17:42:39
news-image

அநுராதபுரத்தில் காட்டு யானை தாக்கி ஒருவர்...

2025-04-19 17:34:39