தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிக்கப்பட்ட பகுதிகள் !

12 Dec, 2020 | 08:38 AM
image

கொரோனா தொற்று பரவல் காரணமாக தனிமைப்படுத்தப்பட்டிருந்த கொழும்பில் உள்ள சில வீட்டுத்திட்ட தொகுதிகள் இன்றிலிருந்து தனிமைப்படுத்தலில் இருந்து உடனடியாக அமுலாகும் வகையில் விடுவிக்கப்பட்டுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் அறிவித்துள்ளது.

இதுகுறித்த தகவலை இராணுவத்தளபதி லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

தனிமைப்படுத்தலில் இருந்து கொழும்பு, முகத்துவாரத்தில் அமைந்துள்ள மெத்சந்த செவன, மிஹிஜய செவன, கொழும்பு மட்டக்குளி பகுதியில் அமைந்துள்ள ரந்திய உயன, கிராண்ட்பாஸில் உள்ள மோதர உயன மற்றும் - சமகிபுர, தெமட்டகொடயில் உள்ள மிஹிந்துசெத்புர ஆகிய இடங்கள் தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இவ்வாறு கொழும்பு மாவட்டத்தில் தனிமைப்படுத்தப்பட்டிருந்த 6 அடுக்குமாடி குடியிருப்புக்களும் இன்று (12) காலை 6 மணி முதல் தனிமைப்படுத்தல் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளன.

தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ள 6 அடுக்குமாடி குடியிருப்புக்களில் மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர்.பரிசோதனைகளின் பின்னர் அதன் முடிவுகளுக்கு அமைய இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டதாக இராணவத்தளபதி லெப்டினன் ஜெனரால் சவேந்திர சில்வா மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இலங்கை கிரிக்கெட்டை உலகில் தலைசிறந்ததாக மீண்டும்...

2024-03-29 20:09:53
news-image

தண்டனைச்சட்டக்கோவையின் 363, 364 ஆம் பிரிவுகளைத்...

2024-03-29 19:35:09
news-image

பொதுத் தேர்தல் இடம்பெற்றால் எந்த கட்சிக்கும்...

2024-03-29 18:29:33
news-image

ஞானசார தேரர் திடீரென சிறைச்சாலை வைத்தியசாலையில்...

2024-03-29 18:07:00
news-image

மார்ச்சில் பணவீக்கம் 0.9 சதவீதமாக சடுதியாக...

2024-03-29 18:01:49
news-image

யாழ். போதனா வைத்தியசாலைக்கான எரியூட்டியை அமைச்சர்...

2024-03-29 17:55:07
news-image

பொதுஜன பெரமுனவின் மாவட்ட மகா சம்மேளனம்...

2024-03-29 17:15:52
news-image

இனப்பிரச்சினைக்கு 13 வது திருத்தத்தின் அடிப்படையில்...

2024-03-29 16:52:41
news-image

சிவனொளிபாத மலையிலிருந்து பள்ளத்தில் விழுந்த சுற்றுலா...

2024-03-29 17:02:49
news-image

சந்தேகத்துக்கிடமான செயற்பாடுகள் காணப்பட்டால் உடனடியாக பொலிஸாருக்கு...

2024-03-29 18:20:48
news-image

அநுராதபுரம் திறந்தவெளி சிறைச்சாலையில் இரு கைதிகள்...

2024-03-29 15:55:47
news-image

அதிகார பகிர்வினால் மாத்திரமே பொருளாதார வளர்ச்சி...

2024-03-29 15:40:08