டிக்கோயா டங்கல் தோட்ட மேற்பிரிவில் உள்ள ஆலயத்திற்கு அருகில் விளையாடிக் கொண்டிருந்த 7 வயது சிறுவன் குறித்த ஆலயத்தில் பொருத்தப்பட்டிருந்த ஆலய மணியின் கயிற்றில் கழுத்து பகுதி இறுகியதால் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இன்று காலை 10.30 மணியளவில் ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலய முற்றத்தில் விளையாடிக் கொண்டிருந்த 7 வயது சிறுவன் அந்த ஆலயத்தில் பொருத்தப்பட்டிருந்த ஆலய மணி கயிற்றில் கழுத்து பகுதி இறுகியதால் மரணித்துள்ளதாக தெரியவருகின்றது.
சிறுவனின் சடலம் மஸ்கெலியா, மாவட்ட வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ள நிலையில், பிரேத பரிசோதனையை மஸ்கெலியா, மாவட்ட வைத்திய அதிகாரி லியத்தபிட்டிய மற்றும் திடீர் மரண விசாரணை அதிகாரி நரசிம்ம பெருமாள் ஆகியோர் மேற்கொள்ளவுள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
மேலும் குறித்த சிறுவனின் தந்தை, தாய் பணிக்கு சென்ற வேளையில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரிவித்தனர்.
இதையடுத்து நோர்வுட் பொலிஸார் குறித்த சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM