'அரசியலுக்காக மக்களை மலினப்படுத்தாதீர்கள்': தவிசாளர் நிரோஷ்

Published By: J.G.Stephan

10 Dec, 2020 | 06:16 PM
image

அபிவிருத்தியைத் தடுப்பது எனதோ அல்லது பிரதேச சபையினதோ நோக்கம் கிடையாது. மாறாக அபிவிருத்தியை சட்ட திட்டங்களுக்கு ஏற்ப ஒழுங்குபடுத்துவதே எமது நோக்கம். 

இந்நிலையில் மக்களை மடையர்கள் ஆக்காதீர்கள். அரசியலுக்காக மலினப்படுத்தாதீர்கள் என வலிகாமம் கிழக்கு பிரதேச சபைத் தவிசாளர் தெரிவித்தார்.

வலிகாமம் கிழக்கு பிரதேச சபையின் முன் தவிசாளர் அபிவிருத்தியைத் தடுக்கின்றார் எனக் குற்றஞ்சாட்டி இன்று வியாழக்கிழமை (10.12.2020) ஆர்ப்பாட்டம் இடம்பெற்றது. இதில் அச்செழு அம்மன் வீதியைச் சேர்ந்த மக்கள் அழைத்துவரப்பட்டு ஆர்ப்பாட்டம் மேற்கொள்ளப்பட்டது. அவ்வார்ப்பாட்டக்காரர்களை பொலிஸார் பிரதேச சபை வாசலில் மறித்திருந்தனர். இந்நிலையில் ஆர்ப்பாட்டக்காரர்களை தவிசாளர் சென்று சந்தித்து நிலைமையை புரிய வைத்திருந்தார்.  

இதன்போது அபிவிருத்தியை தடுப்பது எங்கள் யாருடைய நோக்கமும் அல்ல. எமது சபைக்குப் பகிரப்பட்ட அதிகாரம் ஒன்றை மத்திய அரசாங்கம் நிராகரிக்கின்ற நிலையில் அதனை சகித்துப்போக முடியாது. அதிகாரப்பகிர்வினை நாங்கள் வலியுறுத்துகையில் மத்திய அரசாங்கம் அபிவிருத்தி ஒன்றை மேற்கொள்ள வேண்டுமாக இருப்பின் உரிய முறைப்படியான அனுமதிகளை பெறுமாறே வலியுறுத்துகின்றோம். அவ் அனுமதிக்கு முறைப்படியான கடிதம் கிடைக்கப்பெற்றால் உடன் சபையைக்கூட்டி அனுமதி தீர்மானிக்கப்படும்.  உரிய அனுமதிகள் பெறப்படின் அபிவிருத்தியை மேற்கொண்டு முன்னெடுக்க நாமும்  ஒத்துழைப்போம். சாதாரணமாக நிர்வாக ரீதியில் முன்னெடுக்கபட வேண்டிய விடயங்களாக இவை இருந்தபோதும்  பகிரப்பட்ட  அதிகாரம் ஒன்றை அனுபவிப்பதற்கான மோதல்களே நடக்கின்றன. இவ்விடயத்தினை கிராமங்களில் சென்று பிழையாக அர்த்தப்படுத்தக்கூடாது. மக்களின் அரசியல் அபிலாசைகளை சிதறடிப்பதற்காக சாதிய அடிப்படையிலான கருத்துக்களைக்கூறி மக்களை பிழையாக வழி நடத்த எத்தனிக்கின்றனர்.

முற்போக்காகவே வலிகாமம் கிழக்கு பிரதேச சபை சிந்திக்கின்றது. இந்நிலையில் இவ் ஆர்ப்பாட்ட ஏற்பாடு செய்த அரசியல்வாதிகளுக்கு சில விளக்கத்தினை நாம் கொடுக்கவேண்டியுள்ளது. மக்கள் ஆர்ப்பாட்டமாக வந்த பின்னர் எமது உண்மைகளைக் கண்டுகொண்டனர். மக்களை நாம் மதிக்கின்றோம் என வலிகாமம் கிழக்கு பிரதேச சபைத்தவிசாளர் தியாகராஜா நிரோஷ் தெரிவித்தார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பௌத்த மதத்தை அவமதித்து விட்டு மன்னிப்பு...

2023-05-28 17:54:11
news-image

க.பொ. த. சாதாரண தர பரீட்சை...

2023-05-28 17:57:56
news-image

க.பொ.த. சாதாரண தரப் பரீட்சை எழுதவுள்ள...

2023-05-29 06:30:17
news-image

ஜனாதிபதியை இழிவுபடுத்தும் விதத்தில் கருத்துக்களை வெளியிட்ட...

2023-05-29 06:21:46
news-image

மதங்களை அகெளரவப்படுத்துபவர்களுக்கு எதிராக புதிய சட்டம்...

2023-05-28 17:52:17
news-image

30 ஆம் திகதி நள்ளிரவு முதல்...

2023-05-28 17:51:09
news-image

மதங்களை அவமதிப்பவர்களுக்கு எதிராக ஐ.சி.சி.சி.பி.ஆர்.சட்டத்தின் கீழ்...

2023-05-28 16:44:46
news-image

ஜூன் 8 ம் திகதி முதல்...

2023-05-28 20:19:50
news-image

வடமேல் மாகாணத்திலிருந்து வெளி மாகாணங்களுக்கு கால்நடைகளை...

2023-05-28 17:49:28
news-image

மிக விரைவில் தேர்தல் ஒன்றுக்கு செல்ல...

2023-05-28 17:48:27
news-image

வடக்கு, கிழக்கில் பரவிய தோல் கழலை...

2023-05-28 18:34:12
news-image

யாழில் உறவினரின் மரணச் செய்தியை சொல்லச்...

2023-05-28 18:10:40