எதிர்வரும் தினங்களில் வவுனியாவில் மின்சாரம் தடைசெய்யப்படும் என இலங்கை மின்சார சபை அறிவித்துள்ளது.
இம்மாதம் 10, 14, 15, 16, 17, 18, 19 ஆம் திகதிகளில் காலை 8.00 மணி தொடக்கம் மாலை 5.00 மணி வரை மின்சாரம் துண்டிக்கப்படுவதாகவும், அத்தியாவசிய பராமரிப்பு வேலைகளுக்காகவே மின்சாரம் துண்டிக்கப்படுவதாகவும் இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.
அந்த வகையில், 10ஆம் திகதி வவுனியா சூடுவெந்தபுலவு கிராமத்திலும், 14ஆம் திகதி வவுனியா புதிய சின்னக்குளம் கிராமம், அரசடிக்குளம் பகுதியிலும், 15ஆம் திகதி வவுனியா புதிய சின்னக்குளம் கிராமம், அரசடிக்குளம் பகுதியிலும், 16ஆம் திகதி வவுனியா கோவிற்குளம் 10ஆவது ஒழுங்கையிலிருந்து சிதம்பரபுரம் வரையிலான பகுதியிலும், 17ஆம் திகதி வவுனியா அரசடிக்குளம் பகுதியிலும், 18ஆம் திகதி வன்னி இராணுவபடை முகாம், வன்னி விமானப்படை முகாம், விமானப்படை றேடார் பகுதியிலும் மற்றும் 19ஆம் திகதி வவுனியா கோவிற்குளம் 10ஆம் ஒழுங்கையிலிருந்து சிதம்பரபுரம் வரையிலும் , மகாகச்சக்கொடிய கிராமம் ஆகிய இடங்களிலும் மின் தடை அமுல்படுத்தப்பட்டுள்ளது.
இந்த நேரங்களில் வைத்தியசாலை மற்றும் மக்கள் பயன்பாட்டிற்கான பொது இடங்களில் முன்கூட்டியே மின் தடையை நிவர்த்தி செய்யக்கூடிய மாற்று ஏற்பாடுகளைச்செய்ய வேண்டும் என கேட்கப்பட்டுள்ளது.
எனவே, மக்கள் அனைவரும் மின்தடைக்கான தேவையான முன் ஆயத்த நடவடிக்கைளை எடுக்குமாறு இலங்கை மின்சார சபை கேட்டுக்கொண்டுள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM