(ஆர்.யசி, எம்.ஆர்.எம்.வஸீம்)
யார் அரசாங்கம் அமைத்தாலும் அவர்களுடன் கலந்துரையாடி தோட்ட பிரதேச அபிவிருத்திகளை பெற்றுக்கொடுக்க நாங்கள் தயாராக இருக்கின்றோம். நல்லாட்சி அரசாங்க காலத்தில் பெருந்தோட்டங்களுக்கு எம்மால் முடியுமான அபிவிருத்திகளை மேற்கொண்டதால் தான் மக்கள் எம்மை மீண்டும் இந்த சபைக்கு அனுப்பிவைத்துள்ளார்கள் என ஐக்கிய மக்கள் சக்தி உறுப்பினர் வீ. ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் இன்று செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற அடுத்த வருடத்துக்கான வரவு செலவு திட்டத்தில் நெடுஞ்சாலைகள் மற்றும் போக்குவரத்து அமைச்சு மற்றும் இராஜாங்க அமைச்சுகளுக்கான நிதி ஒதுக்கீடு தொடர்பிலான குழுநிலை விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.
அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில்,
நல்லாட்சி அரசாங்க காலத்தில் நாங்கள் தோட்டங்களுக்கு எதனையும் செய்யவில்லை என அரச தரப்பில் இருப்பவர்கள் தெரிவிக்கின்றனர். நாங்கள் செய்த சேவைகள் அந்த மக்களுக்கு தெரியும். அதனால்தான் அந்த மக்கள் எங்களுக்கு நன்றிக்கடனாக தமிழ் முற்போக்கு கூட்டணி உறுப்பினர்கள் 6பேரை மீண்டும் பாராளுமன்றத்துக்கு தெரிவுசெய்து அனுப்பி இருக்கின்றனர். நாங்கள் பெருந்தோட்டங்களுக்கு சேவை செய்யவில்லை என்றால் தேர்தலில் தெரிவாகி இருக்கமாட்டோம்.
அத்துடன் பெருந்தோட்டங்களில் பல பாதைகளை அமைப்பதற்கு நாங்கள் முன்னிருந்து அடிக்கல்களை நாட்டி இருக்கின்றோம். இன்னும் பல வேலைத்திட்டங்கள் செய்யப்படாமல் இருக்கின்றன. அவற்றை இந்த அரசாங்கத்தில் இருந்து எங்களுக்கு பெறுக்கொள்ள முடியுமான பங்குகளை பெற்றுக்கொண்டு தோட்டங்களின் அபிவிருத்திக்கு நடவடிக்கை எடுப்போம். யார் அரசாங்கம் செய்தாலும் அவர்களுடன் கலந்துரையாடி எமது பிரதேசங்களுக்கான அபிவிருத்தி வேலைத்திட்டங்களை பெற்றுக்கொடுக்க நாங்கள் தயாராக இருக்கின்றோம்.
மேலும் ஹட்டன் நோர்வூட் பாடசாலை கொரோனா அச்சுறுத்தல் காரணமாக மூடப்பட்டிருக்கின்றது. இந்த பாடசாலையில் ஆயிரக்கணக்கான மாணவர்கள் கல்வி கற்கின்றனர். இந்த பாடசாலையை மாத்திரம் மூடி இதனை கட்டுப்படுத்துவது சாத்தியமாகாது என நினைக்கின்றேன். ஏனெனில் இந்த பாடசாலையில் படிக்கும் சகோதரர்கள் வேறு பாடசாலைகளுக்கு செல்லக்கூடியவர்களாக இருப்பார்கள். அதேபோன்று அங்கு கற்பிக்கும் ஆசிரியர்களின் பிள்ளைகள் அல்லது வேறு யாரும் வேறு பாடசாலைகளுக்கு செல்பவர்களாக இருக்கலாம்.
அதனால் ஹட்டன் கல்வி வலயத்தில் இருக்கும் அனைத்து பாடசாலைகளையும் குறிப்பிட்ட காலத்துக்கு மூடிவிடவேண்டும். அதன் மூலமே இதனை கட்டுப்படுத்த முடியுமாகும் என்றார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM