(எம்.ஆர்.எம்.வஸீம்)
சிறைச்சாலையில் இருக்கும் போதைப்பொருளுக்கு அடிமையாகியுள்ள கைதிகளுக்கு புனர்வாழ்வளித்து அவர்களை சமூகத்துடன் இணைக்க நடவடிக்கை எடுத்து வருகின்றோம் என நீதி அமைச்சர் அலிசப்ரி தெரிவித்தார்.
மஹர சிறைச்சாலையில் இடம்பெற்ற கலவரம் தொடர்பாக ஆராய்ந்து அறிக்கை சமர்ப்பிக்க நீதி அமைச்சர் அலி சப்ரியினால் நியமிக்கப்பட்ட குழுவின் இடைக்கால அறிக்கை நீதி அமைச்சர் அலிசப்ரியிடம் குழுவின் தலைவர் முன்னாள் மேல் நீதிமன்ற நீதிபதி குசலா சரோஜினி வீரவர்த்தனவினால் இன்று கையளிக்கப்பட்டது.
அறிக்கைகயை பெற்றுக்கொண்ட பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.
அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில்,
மஹர சிறைச்சாலையில் கடந்த வாரம் இ்டம்பெற்ற சம்பவம் தொடர்பில் பல விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன. நீதி அமைச்சினால் நாங்கள் விசாரணை குழு ஒன்றை அமைத்திருந்தோம். அதன் இடைக்கால அறிக்கையே தற்போது கிடைக்கப்பெற்றிருக்கின்றன. ஒரு மாத காலத்தில் இதன் பூரண அறிக்கையை கையளிக்குமாறு கோரி இருக்கின்றேன்.
அத்துடன் கொவிட் 19 இரண்டாம் அலை சிறைச்சாலைக்குள் பரவிய பின்னர் 2020 ஒக்டோபர் 12ஆம் திகதியாகும் போது சிறைச்சாலைக்குள் சிறைக்கைதிகள் 32ஆயிரத்தி 200பேர் இருந்தார்கள். என்றாலும் கடந்த 5 ஆம் திகதியாகும் போது அதனை 26ஆயிரத்தி 364 வரை குறைத்துக் கொள்ள முடியுமாகி இருக்கின்றது. குறுகிய தினத்துக்குள் 6ஆயிரம் பேரை விடுவித்திருக்கின்றோம்.
மேலும் போதைப்பொருளுக்கு அடிமையாகி இருப்பவர்களுக்கு புனர்வாழ்வளிப்பதே எமது நோக்கமாகும். சிறைக்கைதிகளுக்கு புனர்வாழ்வு முகாம்கள் அமைத்து, விசேடமாக போதைக்கு அடிமையாகி இருப்பவர்களை அதிலிருந்து மீட்டெடுக்கவேண்டும். அவர்களுக்கு புனர்வாழ்வளித்து சமூகத்துடன் இணைக்க நடவடிக்கை எடுக்கவுள்ளோம் என்றார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM