மஹர சிறைச்சாலை கலவரம் தொடர்பில் ஆராய நியமிக்கப்பட்ட குழுவின் அறிக்கை கையளிப்பு

Published By: Digital Desk 4

07 Dec, 2020 | 09:47 PM
image

(எம்.ஆர்.எம்.வஸீம்)

சிறைச்சாலையில் இருக்கும் போதைப்பொருளுக்கு அடிமையாகியுள்ள கைதிகளுக்கு புனர்வாழ்வளித்து அவர்களை சமூகத்துடன் இணைக்க நடவடிக்கை எடுத்து வருகின்றோம் என நீதி அமைச்சர் அலிசப்ரி தெரிவித்தார்.

மஹர சிறைச்சாலையில் இடம்பெற்ற கலவரம் தொடர்பாக ஆராய்ந்து அறிக்கை சமர்ப்பிக்க நீதி அமைச்சர் அலி சப்ரியினால் நியமிக்கப்பட்ட குழுவின் இடைக்கால அறிக்கை நீதி அமைச்சர் அலிசப்ரியிடம் குழுவின் தலைவர்  முன்னாள் மேல் நீதிமன்ற நீதிபதி குசலா சரோஜினி வீரவர்த்தனவினால் இன்று  கையளிக்கப்பட்டது. 

அறிக்கைகயை பெற்றுக்கொண்ட பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே  இவ்வாறு குறிப்பிட்டார்.

அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில்,

மஹர சிறைச்சாலையில் கடந்த வாரம் இ்டம்பெற்ற சம்பவம் தொடர்பில் பல விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன. நீதி அமைச்சினால் நாங்கள் விசாரணை குழு ஒன்றை அமைத்திருந்தோம். அதன் இடைக்கால அறிக்கையே தற்போது கிடைக்கப்பெற்றிருக்கின்றன. ஒரு மாத காலத்தில் இதன் பூரண அறிக்கையை கையளிக்குமாறு கோரி இருக்கின்றேன்.

அத்துடன் கொவிட் 19 இரண்டாம் அலை சிறைச்சாலைக்குள் பரவிய பின்னர் 2020 ஒக்டோபர் 12ஆம் திகதியாகும் போது சிறைச்சாலைக்குள் சிறைக்கைதிகள் 32ஆயிரத்தி 200பேர் இருந்தார்கள்.  என்றாலும் கடந்த 5 ஆம் திகதியாகும் போது அதனை 26ஆயிரத்தி 364 வரை குறைத்துக் கொள்ள முடியுமாகி இருக்கின்றது. குறுகிய தினத்துக்குள் 6ஆயிரம் பேரை விடுவித்திருக்கின்றோம்.

மேலும் போதைப்பொருளுக்கு அடிமையாகி இருப்பவர்களுக்கு புனர்வாழ்வளிப்பதே எமது நோக்கமாகும். சிறைக்கைதிகளுக்கு புனர்வாழ்வு முகாம்கள் அமைத்து, விசேடமாக போதைக்கு அடிமையாகி இருப்பவர்களை அதிலிருந்து மீட்டெடுக்கவேண்டும். அவர்களுக்கு புனர்வாழ்வளித்து சமூகத்துடன் இணைக்க நடவடிக்கை எடுக்கவுள்ளோம் என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

அரசு கட்டமைப்புக்களின் பங்குகளைக் கொள்வனவு செய்ய...

2024-04-18 16:30:09
news-image

இளைஞர்கள் எதிர்பார்க்கும் இலங்கை கட்டியெழுப்பப்படும் -...

2024-04-18 23:45:38
news-image

யாழ்ப்பாணத்தில் கிணற்றில் விழுந்த இளம் குடும்பப்...

2024-04-18 22:24:04
news-image

சுதந்திரக் கட்சியின் உத்தியோகபூர்வமற்ற தலைவராக ரணில்...

2024-04-18 16:53:55
news-image

களுத்துறையில் சுற்றுலா பயணிக்கு வடை மற்றும்...

2024-04-18 21:19:33
news-image

மக்களின் கோரிக்கைக்கு அமைய முறைமை மாற்றத்தை...

2024-04-18 20:45:44
news-image

மே மாத இறுதிக்குள் வடக்கில் 60...

2024-04-18 17:27:02
news-image

யாழில் நள்ளிரவில் சுண்ணகற்கள் அகழ்ந்து எடுக்கப்பட்டு...

2024-04-18 17:21:57
news-image

உண்ணாவிரதமிருந்து உயிர்நீர்த்த தியாகதீபம் அன்னை பூபதியின்...

2024-04-18 18:54:05
news-image

இராணுவ வீரர்களின் பொதுமன்னிப்பு காலம் தொடர்பில்...

2024-04-18 19:50:26
news-image

பாடசாலை சூழலில் கனரக வாகனங்கள் போக்குவரத்தில்...

2024-04-18 17:13:51
news-image

யாழில் குழாய்க்கிணறுகளை தோன்றுவதால் ஏற்படும் ஆபத்துக்கள்...

2024-04-18 17:29:02