சீரற்ற காலநிலையால் அவதியுறும் வவுனியா கற்குளம் மக்கள்

Published By: Digital Desk 4

07 Dec, 2020 | 09:04 PM
image

நாட்டில் நிலவிவரும் சீரற்ற காலநிலையால் வவுனியா மாவட்டமும் பாதிக்கப்பட்டுள்ளது. 143 குடும்பங்களை சேர்ந்த 441 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 

இந் நிலையில் வவுனியா ஆசிகுளம் கிராமசேவகர் பிரிவுக்குற்பட்ட கற்குளம் படிவம் 4 கிராமத்தில் வசிக்கும் மக்கள் மிகையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர்.

கடந்த 5 நாட்களாக தொடர்ச்சியாக மழைவீழ்ச்சி பதிவாகிவரும் நிலையில் கற்குளம் கிராமத்தில் தற்காலிக கூடாரங்களில் வாழும் 37 குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

தகரக் கூடாரங்களுக்குள்ளும், மண்வீடுகளிலும் கைக் குழந்தைகள் கற்பிணித்தாய்மார், வயது முதிர்ந்தவர்களென பலரும் இக் கிராமத்தில் வாழ்ந்து வருகின்றனர். 

தற்போதைய அடை மழை காரணமாக மக்கள் வசிக்கும் கூடாரங்களின் சுவர்கள் ஊறி இடிந்து விழும் அபாயநிலையில் இருக்கின்றது. வீடுகளுக்குள் மழைநீர் ஊற்றெடுத்து காணப்படுகின்றது.

மலசலகூடம், நிரந்தரவீடு, மின்சாரம், குடிநீரென அடிப்படை வசதிகள் இல்லாமல் காட்டுப்பகுதியை அண்டிய சூழலில் மக்கள் பல்வேறு துயரங்களுடன் வாழ்ந்து வருகின்றனர்.

இந் நிலையில் கற்குளம் மக்கள் அன்றாட சீவியத்துக்காக நிவாரண உதவிகள் தேவைப்படுகின்றது. மக்களின் நிலையை கருத்தில் கொண்டு சமூக ஆர்வலர்கள் அரசியல் வாதிகளென பலரும் கிராமத்து மக்களின் பக்கம் தமது பார்வையை செலுத்தவேண்டும் என பாதிக்கப்பட்ட மக்கள்  கோரிக்கை விடுக்கின்றனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

வவுனியா சிறைச்சாலையிலிருந்து கைதி ஒருவர் தப்பியோட்டம்

2025-03-22 17:27:21
news-image

கொழும்பு - கண்டி வீதியில் இரு...

2025-03-22 16:51:04
news-image

உள்ளூராட்சி மன்ற தேர்தல் ஈ.பி.டி.பியின் வெற்றிக்கான...

2025-03-22 16:43:17
news-image

தெவிநுவர துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் “பாலே...

2025-03-22 16:20:17
news-image

ஹெரோயின் போதைப்பொருளுடன் இருவர் கைது

2025-03-22 15:52:03
news-image

கொட்டாஞ்சேனையில் ஐஸ் போதைப்பொருளுடன் இளைஞன் கைது

2025-03-22 15:43:21
news-image

ஹங்வெல்லவில் கோடாவுடன் ஒருவர் கைது

2025-03-22 15:33:58
news-image

கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்த ஜப்பான் கப்பல்

2025-03-22 15:09:57
news-image

மன்னார் பள்ளமடு - பெரிய மடு...

2025-03-22 14:04:20
news-image

போதைப்பொருள் கடத்தல் காரருடன் நெருங்கிய தொடர்புகளைப்...

2025-03-22 13:30:47
news-image

பாலஸ்தீன மக்களின் விடுதலையானது,மூன்றாம் உலகத்தில் வாழுகின்ற...

2025-03-22 13:06:42
news-image

ஐக்கிய மக்கள் சக்தியின் கொழும்பு மேயர்...

2025-03-22 13:23:09