ஈஸ்டர் தாக்குதலுடன் தொடர்புபட்ட 257 பேர் சிறையில் - சரத் வீரசேகர

Published By: Vishnu

06 Dec, 2020 | 11:37 AM
image

(ஆர்.யசி, எம்.ஆர்.எம்.வசீம்)

ஈஸ்டர் தாக்குதலுடன் நேரடியாக தொடர்புபட்ட 257 நபர்கள் தடுப்புக்காவலில் உள்ளனர், இவர்களுக்கான சட்ட நடவடிக்கை எடுக்கவேண்டியது சட்டமா அதிபரிகள் கைகளில் பொறுப்பாகும் எனத் தெரிவித்த பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர,  திங்கட்கிழமை சட்டமா அதிபரை சந்தித்து வழக்குகளை துரிதப்படுத்த வலியுறுத்துவோம் என்றும் கூறினார்.

ராஜபக்ஷ அரசாங்கம் ஆட்சிக்கு வந்து ஒரு வருடம் கடந்துள்ள போதிலும் ஈஸ்டர் தாக்குதல் குறித்த விசாரணைகளில் எந்தவித முன்னேற்றமும் தென்படவில்லை எனவும், குற்றவாளிகளை கண்டறிய அரசாங்கம் என்ன நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளது என எதிர்க்கட்சி உறுப்பினர்கள் சபையில் கேள்வி எழுப்பிய வேளையில் அதற்கு பதில் தெரிவிக்கும் விதத்தில் அமைச்சர் சரத் வீராசேகர இதனைக் கூறினார்.

குற்றப்புலனாய்வு பிரிவு, பயங்கரவாத தடுப்பு பிரிவினால் ஈஸ்டர் தாக்குதலுடன் தொடர்புபட்ட 171 நபர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர். மேலும் 86 பேர் தடுப்புக்காவலில் உள்ளனர். மொத்தமாக 257 பேர் இந்த சம்பவத்துடன் தொடர்புபட்டுள்ளதாக அடையாளம் காணப்பட்டுள்ளோம். இவர்கள் குறித்த வழக்குகள் தொடுக்கப்பட்டுள்ளது.

எனவே திங்கட்கிழமை சட்டமா அதிபரை சந்தித்து சட்ட நடவடிக்கைகளை துரிதப்படுத்த வலியுறுத்தவுள்ளேன். அரசாங்கமாக நாம் சகல நடவடிக்கைகளையும் முன்னெடுத்துள்ளோம். வழக்குகளை தொடுக்க வேண்டிய பொறுப்பு தற்போது சட்டமா அதிபரின் கையிலேயே உள்ளது.

மனித படுகொலை மற்றும் சதித்திட்டம் குறித்து முழுமையான விசாரணைகள் முடிந்து விட்டது. இதில் அடையாளம் காணப்பட்டுள்ள 257 பேரும் குற்றத்துடன் நேரடியாக தொடர்புபட்டவர்கள். எனவே இவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டியது மட்டுமே உள்ளது. இவர்களுக்கு எதிரான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் வேளையில் அவர்கள் யார் என்பது தெரியவரும். 

இந்த விசாரணைகள் குறித்து இன்னும் ஒரே ஒரு கோப்பு மட்டுமே கையளிக்கப்படவுள்ளது, இதில் அரசியல் ரீதியில், வேறு வழிகளில் உதவி செய்தவர்களின் தகவல்கள் உள்ளன. அதனையும் கொடுத்தவுடன் முழுமையாக அனைவரும் தண்டிக்கப்படுவர். இரகசிய பரிசோதனைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்ற நிலையில் யார் எவர் என்ற காரணிகளை இப்போது கூற மாட்டோம். அதனை தெரிவித்தால் நிஷாந்தவை நாட்டை விட்டு தப்பவைத்ததைபோலவே இவர்களையும் அனுப்பி விடுவீர்கள். வழக்குகள் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் வேளையில் இந்த சபையில் உள்ள ஒரு சிலரும் குற்றவாளிகள் என நிருபிக்கப்படும். அதுவரை வேடிக்கை பார்த்துக்கொண்டு இருங்கள் என்றார். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இலங்கை கடல் எல்லைக்குள் சட்டவிரோதமாக நுழைந்ததற்காக...

2026-04-15 02:19:11
news-image

களுவாஞ்சிக்குடியில் இறந்த கோழி இறைச்சி விற்பனை...

2026-04-14 23:42:34
news-image

கம்பஹாவில் பிரதமர் தலைமையில் சிங்கள, தமிழ்...

2026-04-14 19:57:56
news-image

வென்னப்புவ பகுதியில் 'ஹைடொப் துஷார'வின் பிரதான...

2026-04-14 17:38:09
news-image

சித்திரை புத்தாண்டு காலப்பகுதியில் 54 அதிவேக...

2026-04-14 17:20:25
news-image

மன்னார் திருக்கேதீஸ்வர ஆலயத்தில் இடம் பெற்ற...

2026-04-14 15:14:44
news-image

வாழைச்சேனையைச் சேர்ந்த குடும்பஸ்தர் நீரில் மூழ்கி...

2026-04-14 15:06:44
news-image

முல்லைத்தீவு தேராவில் பகுதியில் கிணற்றிலிருந்து பெண்ணின்...

2026-04-14 14:56:42
news-image

டித்வா' சூறாவளியினால் சேதமடைந்த, அரசாங்கத்தின் இழப்பீட்டுத்...

2026-04-14 13:34:13
news-image

பலத்த மின்னல் தாக்கம் குறித்து வளிமண்டலவியல்...

2026-04-14 14:02:42
news-image

தேசிய மின்கட்டமைப்பைப் பாதுகாக்க சூரிய சக்தி...

2026-04-14 12:58:00
news-image

யாழ் நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தில் பராபவ...

2026-04-14 13:22:07