(க.பிரசன்னா)
தனிமைப்படுத்தல் செயற்பாடுகள் காரணமாக விமான நிலையத்தில் தீர்வையற்ற (Duty free) பொருட் கொள்வனவு சந்தர்ப்பத்தினை பெற்றுக்கொள்ளாதவர்களுக்கு மீண்டும் அதற்கான வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
கொவிட் 19 தொற்று நிலைமை காரணமாக கட்டாய தனிமைப்படுத்தல் செயன்முறைக்கு உட்படுத்தப்பட்ட காரணத்தால் விமான நிலையத்தின் தீர்வையற்ற வர்த்தக தொகுதியில் அமைந்துள்ள விற்பனை நிலையங்களில் பொருட்களை கொள்வனவு செய்ய முடியாமல் போன விமான பயணிகளுக்கு அதற்கான வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
அதன்படி, தனிமைப்படுத்தல் நிறைவடைந்த நாள் முதல் ஒரு மாத காலத்திற்குள் விமான நிலையத்திற்கு வருகைதந்து அங்குள்ள தீர்வையற்ற விற்பனை நிலையங்களில் பொருட்களை வாங்கிச் செல்ல வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கட்டுநாயக்க விமான நிலையத்தின் வெளியேறும் முனையத்தின் பொதுமக்களுக்கான பார்வையாளர் அரங்கு இன்று சனிக்கிழமை காலை 9 மணிமுதல் திறக்கப்பட்டுள்ள நிலையில் குறித்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
அதன்படி, ஒரு விமான பயணிக்கு வெளியேறும் முனையத்தின் பார்வையாளர் அரங்கிற்கு ஒருவரை மாத்திரமே அழைத்துச் செல்ல முடியுமென்பதுடன் சுகாதார பிரிவினரால் வழங்கப்பட்டுள்ள சுகாதார வழிமுறைகளுக்கு அமைவாக இந்த செயற்பாடுகள் முன்னெடுக்கப்படுமென அறிவிக்கப்பட்டுள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM