கிளிநொச்சி, காரைநகர் பாடசாலைகள் திங்கள் முதல் ஆரம்பம்..!

Published By: J.G.Stephan

05 Dec, 2020 | 10:39 AM
image

வடக்கு மாகாண பாடசாலைகள் அனைத்தும் எதிர்வரும் திங்கட்கிழமை முதல் வழமை போன்று இயங்க அனுமதிக்கப்பட்டுள்ளது என வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி ஆ.கேதீஸ்வரன் தெரிவித்தார்.

கொரோனா அச்சம் காரணமாக கிளிநொச்சி மாவட்ட பாடசாலைகளும் யாழ்ப்பாணத்தில் காரைநகர் இந்துக் கல்லூரியும் மூடப்பட்டிருந்தன.

எனினும் அப்பிரதேசத்தில் தனிமைப்படுத்தப்பட்டவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர் பரிசோதனைகளின் எவருக்கும் கொரோனா தொற்றுக்கள் இல்லை என உறுதிப்படுத்தப்பட்டதையடுத்து பாடசாலைகள் எதிர்வரும் 7 ஆம் திகதி திங்கட்கிழமை தொடக்கம் இயங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக வடக்கு  சுகாதார பணிப்பாளர்  வடக்கு கல்வி அமைச்சின் செயலாளருக்கு உரிய அறிவித்தலை வழங்கியுள்ளார்.

இந்நிலையில், தரம் 6 தொடக்கம் க.பொ.த உயர்தரம் வரையான வகுப்புக்கள் எதிர்வரும் 7 ஆம் திகதி தொடக்கம் நடைபெறும்.

நாடு முழுவதிலும் உள்ள பாடசாலைகளில் தரம் 1 தொக்கம் 5 வரையான வகுப்புக்களை ஆரம்பிப்பதற்கு இதுவரை கல்வி அமைச்சு அனுமதி வழங்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

அமைப்பு முறை மாற்றம் ஏற்பட்டால் மாத்திரமே...

2024-03-29 12:22:11
news-image

கரையோர மார்க்கத்தில் ரயில் சேவைகள் தாமதம்

2024-03-29 12:04:59
news-image

மக்களே அவதானமாக இருங்கள் ; சமூக...

2024-03-29 12:09:37
news-image

இரு மாணவர்கள் மின்சாரம் தாக்கி வைத்தியசாலையில்...

2024-03-29 12:02:26
news-image

தேர்தல் திருத்தச் சட்டம் : ஹக்கீம்...

2024-03-29 11:25:08
news-image

கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை...

2024-03-29 11:11:34
news-image

பிளவை நோக்கி பொதுஜனபெரமுன- டெய்லிமிரர்

2024-03-29 09:59:01
news-image

எந்த தேர்தலில் முதலில் நடைபெறவேண்டும் என்பதை...

2024-03-29 09:42:41
news-image

இன்று பெரிய வெள்ளி

2024-03-29 09:47:02
news-image

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பில் கசிப்பு உற்பத்தி நிலையம்...

2024-03-29 09:20:02
news-image

பொது சுகாதார பரிசோதகர் மீது துப்பாக்கிச்...

2024-03-29 09:27:51
news-image

இன்றைய வானிலை

2024-03-29 06:43:30