(ஆர்.யசி, எம்.ஆர்.எம்.வஸீம்)
புரெவி சூறாவளியால் 1009 குடும்பங்களைச் சேந்த 4007பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அத்துடன் 15 வீடுகள் பூரணமாகவும் 170 வீடுகள் பகுதியளவிலும் பாதிக்கப்பட்டுள்ளன என நீர்ப்பாசன அமைச்சர் மற்றும் அரச பாதுகாப்பு, உள்நாட்டலுவல்கள் மற்றும் அனர்த்த முகாமைத்துவ இராஜாங்க அமைச்சர் சமல் ராஜபக்ஷ தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் இன்று விசேட கூற்றொன்றை முன்வைத்து, புரெவி சூறாவளி தாக்கத்தில் ஏற்பட்டுள்ள பாதிப்பு தொடர்பாக தெளிவூட்டும் அறிவிப்பை வெளியிட்டு உரையாற்றும் போதே இவ்வாறு தெரிவித்தார்.
அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில்,
புரெவி சூறாவளி 2ஆம் திகதி இரவு 10.30மணிக்கும் 11.30 மணிக்கும் இடையில் இலங்கையின் வடகிழக்கு கடற்கரை பிரதேசமான திரியாய் மற்றும் குச்சவெலி ஊடாக இலங்கைக்குள் வந்தது.
புரெவி சூராவளி தாக்கத்தினால் பாதிக்கப்படும் என நாங்கள் எதிர்பார்த்த யாழ்ப்பாணம், கிளிநோச்சி, முல்லைதீவு,வவுனியா, மன்னார், மட்டக்களப்பு, அனுராதபுரம், பொலன்னறுவை, மொனராகலை, புத்தளம், குருநாகல், அம்பாறை மாவட்டங்களில் யாழ்ப்பாணம், திருகோணமலை,முல்லைத்தீவு ஆகிய மாவட்டங்களில் தற்போது கிடைத்திருக்கும் அறிக்கையின் பிரகாரம் சிறிதளவான பாதிப்பு ஏற்பட்டிருக்கின்றது.
இந்த மாவட்டங்களில் சூராவளியால் பாதிக்கப்பட்டு நிர்க்கதியாகும் மக்களை பாதுகாப்பாக தங்கவைப்பதற்காக யாழ்ப்பாணத்தில் 4 பாதுகாப்பு நிலையங்களும் திருகோணமலையில் 49, மன்னாரில் 8, முல்லைத்தீவில் 4 என மொத்தமாக 65 பாதுகாப்பு நிலையங்கள் தயார்ப்படுத்தப்பட்டிருந்தன.
அதன் பிரகாரம் யாழ்ப்பாணத்தில் 134 குடும்பங்களைளச் சேர்ந்த 522 பேரும் கிளிநொச்சி மாவட்டத்தில் 628 குடுங்களைச் சேர்ந்த 1949 பேரும் மன்னார் மாவட்டத்தில் 324 குடும்பங்களைச் சேர்ந்த 1114 பேரும் முல்லைத்தீவு மாவட்டத்தில் 123 குடும்பங்களைச் சேர்ந்த 422 பேருமாக மொத்தமாக இந்த மாவட்டங்களில் இருந்து 1009 குடும்பங்களைச் சேந்த 4007பேர் பாதுகாப்பு நிலையங்களுக்கு அனுப்பிவைக்கப்பட்டிருக்கின்றனர்.
மேலும் யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு, மன்னார், வவுனியா மற்றும் திருகோணமலை ஆகிய மாவட்டங்களில் 551 குடும்பங்களைச் சேந்த 1904 பேர் இந்த சீரற்ற காலநிலை காரணமாக பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் 15 வீடுகள் பூரணமாகவும் 170 வீடுகள் குறைந்தளவிலும் பாதிக்கப்பட்டுள்ளன என்றார்.
இதன்போது எழுந்த தமிழ் தேசிய கூட்டமைப்பு உறுப்பினர் சார்ள்ஸ் நிரமலநாதன், மன்னார் மாவட்டத்தில் பல மீனவ கிராமங்கள் பாதிக்கப்பட்டுள்ளதுடன் அவர்களின் படகுகளும் சேதமடைந்திருக்கின்றன. அதேபோன்று 1258 குடும்பங்கள் நிர்க்கதியாகி இருக்கின்றனர். அவர்கள் தொடர்பில் நடவடிக்கை எடுக்க மாவட்ட செயலாளருக்கு உடனடியாக அறிவிக்கவேண்டும் என்றார்.
அதனைத்தொடர்ந்து எழுந்த செல்வம் அடைக்கலனாதன், நிர்க்கதியாக பாதுகாப்பு நிலையங்களில் இருப்பவர்களும் சமைத்த உணவு வழங்கவே நடவடிக்கை எடுத்திருந்தது. என்றாலும் அங்கு தொடர்ந்து மழை பெய்ந்து வருவதால் சமைப்பதற்கு சிரமப்பட்டு வருகின்றனர். அதனால் அதற்கு மாற்று திட்டம் ஒன்றை ஏற்பாடு செய்யவேண்டும் என்றார்.
உறுப்பினர்களின் கோரிக்கைகள் தொடர்பில் உடனடியாக கவனம் செலுத்தி, நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் பதிலளித்தார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM