விசேட தேவையுடையோருக்கான சர்வதேச தினம் இன்றாகும். 1992ஆம் ஆண்டு ஐக்கிய நாடுகள் சபையினால் நிறைவேற்றப்பட்ட முன்மொழிவிற்கமைய ஆண்டுதோறும் டிசம்பர் 03ஆம் திகதி உலகின் பல நாடுகள் விசேட தேவையுடையோருக்கான தினத்தை கொண்டாடி வருகின்றது. இலங்கையும் தொடர்ச்சியாக அதில் பங்குபற்றிவருவதுடன், அது ஐக்கிய நாடுகள் சபையின் அனுசரணை பெற்ற சர்வதேச நிகழ்வாகும்.
விசேட தேவையுடையோர் தொடர்பான விடயங்களை கவனத்தில் கொள்ளல், விசேட தேவையுடையோரின் பெருமை, உரிமைகள், நலன் மற்றும் நல்வாழ்வை மேம்படுத்துவதற்கு அனுசரணை வழங்குவது என்பன இத்தினத்தை கொண்டாடுவதன் மூலம் எதிர்பார்க்கப்படுகிறது.
விசேட தேவையற்ற சாதாரண குடிமகன் போன்று, விசேட தேவையுடையவர்களும் சம உரிமைகள் மற்றும் வரப்பிரசாதங்களை அனுபவித்து சமூகத்தில் வாழ முடியும். தற்போது உலகளாவிய ரீதியில் முகங்கொடுத்துள்ள கொவிட்-19 தொற்று நிலைமைக்கு மத்தியிலும், விசேட தேவையுடையோரின் உடல் மற்றும் உள ரீதியான ஆரோக்கியம் தொடர்பிலும் கூடுதல் கவனம் செலுத்த வேண்டியுள்ளது.
உலகின் விசேட தேவையுடைய ஒரு பில்லியன் மக்கள் தொகையில் 80 வீதமானோர் அபிவிருத்தியடைந்துவரும் நாடுகளிலேயே வாழ்ந்து வருகின்றனர். அதில் 60 வயதிற்கும் 60 வயதிற்கு மேற்பட்டோரினதும் எண்ணிக்கை 46 சதவீதமாகும் என யுனெஸ்கோ அமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது.
விசேட தேவையுடையோரின் எண்ணிக்கை அதிகரித்தல், அபிவிருத்தியடைந்துவரும் நாடுகளின் அபிவிருத்தி செயற்பாடுகளை சீர்குலைக்கும் செயல் என்றபோதிலும், அதனை நாம் நேர்மறையான வழியில் நாட்டின் அபிவிருத்திக்காக ஈடுபடுத்திக் கொள்ள வேண்டும். அவர்களுக்குரிய விசேட நிர்மாணத் திறன் மற்றும் ஆற்றல்களை மேம்படுத்திக் கொள்வதற்கு தேவையான சூழலை ஏற்படுத்திக் கொடுப்பது அரசாங்கத்தின் முக்கிய பொறுப்பாகும். சுபீட்சத்தின் நோக்கு கொள்கையை மையமாகக் கொண்டு அபிவிருத்தியின் புதிய பாதையில் இலங்கை நுழைந்துள்ள ஒரு சூழ்நிலையில், விசேட தேவையுடைய சகோதர சகோதரிகளின் எதிர்காலம் போன்று நாட்டின் எதிர்காலம் தொடர்பில் நம்பிக்கை கொள்ளக் கூடிய நாளைய தினத்தை உருவாக்குவோம் என தெரிவிக்க விரும்புகிறேன்.
சாதாரண குடிமகனை இலக்காக் கொண்டு முன்னெடுக்கப்படும் அனைத்து நலன் மற்றும் அபிவிருத்தி சார்ந்த நடவடிக்கைகளின் போதும் அதில் விசேட தேவையுடையோரின் பங்களிப்பை ஏற்படுத்துவதற்கும், அவர்களது நலனை கட்டியெழுப்புவதற்கும் எமது அரசாங்கம் அர்ப்பணிப்புடன் செயற்படும். அதன்போது அவர்களுக்கு சமூகத்தின் ஊடாக முகங்கொடுக்க நேரிடும் கஷ்டங்கள் மற்றும் தடைகள் தகர்த்தெறிந்து சமமான உரிமையை அனுபவிப்பதற்கு தேவையான பௌதீக சூழலை ஏற்படுத்திக் கொடுத்தல் நாட்டின் சாதாரண குடிமக்களான எமது பொறுப்பாகும். அதற்கு தேவையான சமூக அணுகுமுறைகளை மாற்றி, அவர்களுக்கு பக்கபலமாக விளங்குவதற்கு இம்முறை விசேட தேவையுடையோருக்கான சர்வதேச தினத்தில் நாம் அனைவரும் ஒன்றிணைவோம்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM