(செ.தேன்மொழி)
பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற தகவலுக்கமைய மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது துப்பாக்கி, துப்பாக்கி ரவைகள் மற்றும் கைக்குண்டு என்பவற்றுடன் வெவ்வேறு பிரதேசங்களில் 3 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
யக்கமுல்ல - மினுவந்தெனிய பகுதியில் வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட குழல் 12 ரக துப்பாக்கியுடன் கராகொட பகுதியைச் சேர்ந்த 37 வயதுடைய சந்தேக நபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இதேவேளை, பதுளை - பந்துலுபிட்டி பகுதியில் குற்றப்புலனாய்வு பிரிவினருக்கு கிடைக்கப்பெற்ற தகவலுக்கமைய மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது மித்தெனிய பகுதியைச் சேர்ந்த 38 வயதுடைய சந்தேக நபரொருவர் உள்நாட்டு துப்பாக்கியுடன் கைது செய்யப்பட்டுள்ளார். இவரிடமிருந்து துப்பாக்கி, குழல் 12 ரக துப்பாக்கி தோட்டாக்கள் இரண்டும் கைப்பற்றப்பட்டுள்ளன.
ஹொரவபொத்தானை பகுதியில் வெளிநாட்டு கைக்குண்டுடன் மொரகேவ பகுதியைச் சேர்ந்த 27 வயதுடைய சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார். இவருக்கு எதிராக ஏற்கனவே நீதிவான் நீதிமன்றத்தில் பிடியாணை உத்தரவும் பிறப்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸாரின் விசாரணைகளின் போது தெரியவந்துள்ளது. சந்தேக நபர்கள் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM